மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியா தனது எரிசக்தி தேவையை உறுதி செய்ய எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இப்போது பலன் அளிக்கத் தொடங்கியுள்ளன. வெனிசுலாவிடம் இருந்து சுமார் 1.2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இந்த மாதத்தில் இறக்குமதி செய்ய உள்ளது.
நீண்டகால வியூகம்
இந்த எண்ணெய் கொள்முதல் என்பது ஏதோ ஈரான் போர் தொடங்கியவுடன் அவசரமாக எடுக்கப்பட்ட முடிவல்ல.
முன்கூட்டியே போடப்பட்ட திட்டம்
ஈரான் போர் பிரச்சனை வெடிப்பதற்கு முன்பே, இந்தியாவின் நீண்டகால மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த எண்ணெய் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.
தற்செயலான சாதகம்
இருப்பினும், தற்போது ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வரும் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முன்கூட்டிய ஒப்பந்தம் இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய பாதுகாப்பாக மாறியுள்ளது.
மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!
2020-க்குப் பிறகு மிகப்பெரிய வரத்து
கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெனிசுலாவிடம் இருந்து இந்தியா அதிகப்படியான எண்ணெயை வாங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 2020 பிப்ரவரி மாதத்தில் தான் இவ்வளவு பெரிய அளவில் இறக்குமதி செய்யப்பட்டது.
ஈரான் நெருக்கடி காரணமாக வழக்கமான வழித்தடங்களில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி இந்திய நிறுவனங்கள் தற்போது வெனிசுலாவை நோக்கித் தீவிரமாகத் திரும்பியுள்ளன. 2020-க்குப் பிறகு வெனிசுலாவிடமிருந்து இந்தியா வாங்கும் மிக அதிகபட்ச எண்ணெய் அளவு இதுவாகும்.
அரசியல் பின்னணி மற்றும் ‘கைது’ விவகாரம்
ஆபரேஷன் அப்சல்யூட் ரிசால்வ் :கடந்த ஜனவரி 3, 2026 அன்று அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தன.
மோசடியாளர்களை முடக்கும் உச்சநீதிமன்றம்: வங்கிகளுக்கு கிடைத்த மிகப்பெரிய ‘வெற்றி’!
தடைகள் நீக்கம்: மதுரோவின் கைதுக்குப் பிறகு, வெனிசுலாவின் புதிய தற்காலிக அரசாங்கத்துடன் அமெரிக்கா இணக்கமான போக்கைக் கடைபிடிக்கிறது. இதன் விளைவாக, வெனிசுலா எண்ணெய் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது.
நேரடி கொள்முதல்: அமெரிக்காவின் சிறப்பு உரிமம் பெற்றிருப்பதால், ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கத் தொடங்கியுள்ளன.

