ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ யாகந்தி உமா மகேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில் இருக்கும் நந்தி சிலையின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆய்வுத் துறையும் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் விரிவாக காண்போம்.

இந்த கோவில் வைணவ மரபுகளின் படி கட்டப்பட்டுள்ளதாக வரலாறுகள் கூறப்படுகிறது. 15 ஆம் ஆண்டில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் சங்க வம்சத்தை சேர்ந்த மன்னர் ஹரிஹர புக்கராய என்பவரால் கட்டப்பட்டது இந்த கோவில். இது ஹைதராபாத்தில் இருந்து 308 கிலோ மீட்டர் தொலைவில் விஜயவாடாவில் இருந்து 359 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

பண்டைய கால பல்லவர்கள் சோழர்கள், சாளுக்கியர்கள் மற்றும் விஜயநகர ஆட்சியாளர்களின் மரபுகளை இந்த கோவில் பிரதிபலிக்கிறது என்று வரலாறுகள் கூறுகிறது. இந்த நந்தி சிலையின் அளவு தினமும் அதிகரித்து வருவதால் அதை சுற்றியுள்ள சில தூண்கள் அகற்றப்பட்டுள்ளன. நந்தியின் வளர்ச்சி காரணமாக வருங்காலத்தில் இன்னும் பல தூண்களை அகற்ற வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

கோவிலில் உள்ள சிவன் சன்னதிக்கு முன்பு இருக்கும் இந்த பிரம்மாண்ட நந்தி சிலை முன்பு சிறியதாக இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இந்த நந்தி சிலை ஒவ்வொரு 20 ஆண்டுகளுக்குள் நந்தியின் அளவு ஒரு அங்குலம் வளர்வதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இந்த நந்தி சிலை செய்யப்பட்ட கல் விரிவடையும் தன்மை கொண்டது என்றும், அவர்கள் நம்புகிறார்கள்.

இந்த சிலை முன் வைக்கப்பட்டுள்ள குறிப்பு பலகையில் முன்பெல்லாம் இந்த நந்தியை வலம் வரக்கூடிய அளவு இடம் இருந்ததாகவும், தற்போது சிலையின் அளவு பெரிதானதால் வலம் வர இடமில்லாமல் போய்விட்டது என்ற குறிப்புகளும் இடம் பெற்றுள்ளது. இந்த கோவில், அகத்திய மாமுனிவர் முன்னாள் வெங்கடேஸ்வருக்கு கோவில் நிறுவ நினைத்தாராம்.

ஆனால், கட்டுமான நேரத்தில் பெருமாளின் சிலையில் இருக்கும் கட்டைவிரல் உடைந்து கோவில் கட்டுமானம் நடுவிலேயே நிறுத்த வேண்டி நிலை ஏற்பட்டதாம். இதனால், ஏமாற்றம் அடைந்த அகத்திய முனிவர் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அவர் கண் முன் தோன்றிய சிவபெருமான் இந்த இடம் கைலாயத்தை போன்ற தோற்றம் கொண்டதால் இது பெருமாளுக்கு உரிய கோவில் அமைக்க உகந்த இடம் இல்லை என தெரிவித்ததாகவும், இதை அடுத்து இங்கு சிவபெருமானுக்கு அகஸ்தியர் கோவில் எழுப்பினார் என்றும் புராணங்களில் கூறப்படுகிறது.
சனியின் பாதிப்பா?.. திருநள்ளாறு கோயிலில் செய்ய வேண்டிய 3 முக்கிய பரிகாரங்கள்..!

முனிவர்கள் இந்த கோவில் அமைந்திருக்கும் பகுதியில் தவம் மேற்கொண்டு இருந்ததாகவும், அப்போது ஒரு முனிவரை காகங்கள் தொந்தரவு செய்ததாகவும், இனி இந்த இடத்தில் காகங்கள் நுழையக்கூடாது என சபித்தார் என்ற கதையும் வரலாறுகளில் கூறப்படுகிறது. காகம் சனிபகவானின் வாகனமாகும். காகம் நுழைய முனிவர் சாபமிட்டதால் காகம் நுலைய தடை ஏற்பட்டதால், இங்கு சனி பகவானும் நுழைய மாட்டார் என்கின்றனர்.

2026 தமிழ்ப் புத்தாண்டு: உங்கள் வீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பூஜைகள்!
மற்ற சிவன் கோவில்களில் இருப்பது போன்ற சிவலிங்கம் இங்கு இல்லாமல் சிவனும் பார்வதியும் சேர்ந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவில் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரே கல்லினால் இந்த சிலை செதுக்கப்பட்டுள்ளது இன்னும், கூடுதல் சிறப்பு.

மலைகள் சூழ அழகிய இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட இந்த கோவிலில் அழகிய புஷ்கரணி அமைந்துள்ளது. இங்கு தொடர்ந்து, தண்ணீர் பாய்வது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த புஷ்கரணியில் ஆண்டு முழுவதும் எப்பொழுதும் தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. அது எங்கிருந்து வருகிறது என்பது தற்போது வரை தெரியாத ஒரு புதிராகவே உள்ளது. கோவிலில் நுழைவதற்கு முன் இந்த புனித நீரில் குளிப்பது வழக்கமாக உள்ளது. இந்த புஷ்கரணியில் குளிப்பதால் அனைத்து பாவங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

