தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜையிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார். அந்த மனுவில் அவர் விஜய் வேறொரு நடிகை உடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தது பலருடைய அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது.

இந்த விவகாரம் அரசியல் ரீதியாக விஜய்க்கு பின்னடைவாகவே கருதப்பட்டது. இதனிடையே, நடிகை திரிஷாவுடன் பிரபல தயாரிப்பாளரின் திருமண நிகழ்ச்சிக்கு விஜய் ஒரே காரில் ஒரே உடையில் ஜோடியாக பங்கேற்றது, பல சர்ச்சைகளையும் வலுத்தது. மேலும், விஜய், த்ரிஷா திருமணம் செய்து கொள்ளப் போவதாக இன்ஸ்டாகிராமில் வெளியான ரீல்ஸ்க்கு த்ரிஷாவின் தாய் லைக் செய்ததும் பலரிடையே சந்தேகத்தை கிளப்பியது.

இந்தியாவின் ‘சூரியன்’ கல்பாக்கத்தில் உதித்தது: 20 ஆண்டுகால கனவு நனவான தருணம்!
இதனால், தவெக தொண்டர்கள் பலரும் விரக்தி அடைந்தனர். இந்த நிலையில், நெல்லையில் நடந்த பிரச்சார கூட்டத்தில் மனைவி சங்கீதாவின் பெயரை குறிப்பிடாமல் விஜய் பேசி இருந்தார். அதில், அவர் பேசுகையில் திமுக நம் மீது எவ்வளவு அவதூறுகள் பரப்புகிறார்கள். அவர்களை தாண்டி இன்னும் சில பேர் அவதூறுகளை பரப்புகிறார்கள்.

மதுக்கூடமாகும் சொகுசு பேருந்துகள்?.. மேம்பாலத்தின் கீழ் நடக்கும் அத்துமீறல்கள்..!
நம்மை சுற்றி இருப்பவர்களை வைத்து இத்தனை வருஷமாக காத்திருந்து தேர்தலுக்கு 30 நாட்களுக்கு முன் நேரம் பார்த்து அவதூறு பரப்புகிறார்கள். அது என்னவென்று உங்களுக்கே தெரியும். அதுவும், மக்களிடம் எடுபடவில்லை. எத்தனை சோதனை கொடுத்தாலும், திமுக பாஜக மற்றும் பலரால் எதுவும் செய்ய முடியாது என்று பேசி இருந்தார். இதில், மற்றும் பலர் என்று சங்கீதாவை குறிப்பிட்டு இருப்பதாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

