இன்று காலை 10 மணி வரை பலரது பார்வையும் மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தின் மீதுதான் இருந்தது. “இந்த முறையாவது வட்டி குறையுமா? அல்லது மீண்டும் லோன் இஎம்ஐ எகிறப்போகிறதா?” என்ற படபடப்பு எல்லோரிடமும் இருந்தது.ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான குழு தனது முடிவை அறிவித்துவிட்டது. இதில் நமக்குச் சாதகமான விஷயங்கள் என்ன, சவால்கள் என்ன என்பதைத் துல்லியமாகப் பார்ப்போம்.
வட்டி மாறவில்லை… இது நல்லதா, கெட்டதா?
ரிசர்வ் வங்கி தனது ‘ரெப்போ ரேட்’ எனப்படும் வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவிலேயே மாற்றாமல் வைத்துள்ளது. லோன் வாங்கியவர்களுக்கு இது ஒரு நிம்மதியான செய்தி. காரணம், வட்டி உயர்ந்தால் உங்கள் வங்கிக் கடனுக்கான மாதத் தவணை கூடும். தற்போது அது அப்படியே தொடர்வதால், உங்கள் பட்ஜெட்டில் கூடுதல் சுமை ஏறாது.
ஏன் வட்டியைக் குறைக்கவில்லை? என்று நீங்கள் கேட்கலாம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய உலக அரசியல் இருக்கிறது. தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் பதற்றமான சூழலால், சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை எப்போது வேண்டுமானாலும் உயரலாம். அப்படி உயர்ந்தால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கூடி, காய்கறி முதல் மளிகை வரை எல்லாமே விலை உயரும் . இதைத் தடுக்கவே, ரிசர்வ் வங்கி இப்போதைக்கு வட்டியைக் குறைக்காமல் “காத்திருப்போம்” என்ற கொள்கையைக் கையாண்டுள்ளது.
இந்தியப் பொருளாதாரம்: உலகிற்கே ஒரு உதாரணம்!
இன்று ஆளுநர் ஆற்றிய உரையில் மிக முக்கியமான விஷயம் இந்தியாவின் வளர்ச்சி. உலக நாடுகள் பல பொருளாதார மந்த நிலையில் தடுமாறும்போது, இந்தியா மட்டும் 6.9% ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார். இது சாதாரண விஷயம் அல்ல! இதற்குக் காரணம் நமது வலுவான உள்நாட்டு உற்பத்தி மற்றும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள்.
மேற்கு வங்கத் தேர்தல் 2026: 91 லட்சம் ஓட்டுகள் நீக்கம் – தேர்தல் ஆணையத்தின் ‘க்ளீன் ஸ்வீப்’..!
மேலும், ‘டிஜிட்டல் ரூபாய்’ பயன்பாட்டை ஊக்குவிக்கப் புதிய வசதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி கையில் காசைத் தேடாமல், செல்போன் மூலமாகவே வங்கி இடைத்தரகர்கள் இன்றிப் பணப் பரிமாற்றம் செய்வது இன்னும் எளிதாகப் போகிறது.
சாமானியர்கள் கவனிக்க வேண்டியவை
வீட்டுக் கடன் : தற்போதைக்கு வட்டி விகிதம் அப்படியே இருப்பதால், கூடுதல் இஎம்ஐ கட்டத் தேவையில்லை.
பிக்சட் டெபாசிட் : மூத்த குடிமக்கள் தங்கள் டெபாசிட்டுகளுக்குத் தொடர்ந்து நல்ல வட்டியைப் பெறுவார்கள்.

