திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் சாரா அர்ஜுன். இவரின் தந்தை ராஜ் அர்ஜுன். இவர் ஒரு ஹிந்தி நடிகர். பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் தாண்டவம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சாரா அர்ஜுனின் தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் முதலில் போபாலில் வசித்து வந்தனர்.

ரிலீஸுக்கு தடை?.. விஜய்யை கிண்டல் செய்த “TN 2026”.. சிக்கல் ஆரம்பம்..!
பின்னர், இவரின் பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடி பெயர்ந்தனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர். இதனை தொடர்ந்து, சைவம் படத்தில் நடித்த பின்னர், பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினி ஆக நடித்திருந்தார். அப்போதே, தெய்வத்திருமகள் படத்தில் பார்த்த குட்டி பொண்ணா இது என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

மஞ்சு வாரியரிடம் மேடையில் அத்துமீறிய ரசிகை.. அதிர்ச்சி வீடியோ..!
இதைவிட ஒரு படி மேலாக கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமானார். இவருடைய, வயது வித்தியாசம் துரந்தர் படத்தில் ஒரு பேசு பொருளானது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை சாராவிற்கு பெற்று தந்தது என்று சொல்லலாம்.

இதையடுத்து ‘Dhurandhar: The Revenge’ படம் வெளியாகி வசூலை அள்ளி வருகிறது. இந்த பட விழாவில் சாரா அர்ஜுன் தோளில் ராகேஷ் பேடி முத்தமிட்டதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து, விளக்கமளித்த ராகேஷ் பேடி இந்த குற்றச்சாட்டுகள் முட்டாள்தனமானது என்று பேசி உள்ளார். மேலும், சாரா எனது வயதில் பாதி கூட இல்லை, அவர் என் மகள் கதாபாத்திரத்தில் நடித்தார்.

படப்பிடிப்பின் போது நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் ஒரு மகள் தந்தையை அணைத்துக் கொள்வது போல அனைத்து கொல்வேன். நாங்கள் ஒரு நல்ல புரிதலையும் நட்பையும் பகிர்ந்து கொண்டோம். இது திரையிலும் பிரதிபலித்தது. ஆனால், மக்கள் அதில், இருக்கும் பாசத்தை பார்க்கவில்லை. ஒரு வயதான மனிதன் இளம்பெண்ணிடம் அத்துமீறி விட்டான் என்று பேசி வருகிறார்கள்.

இது பார்ப்பவரின் கண்களில் தான் பிரச்சனை இருப்பதாக நினைக்கத் தோன்றுகிறது. ஒரு மேடையில் பொதுமக்கள் முன்னிலையில் நான் ஏன் அவரை மோசமான நோக்கத்துடன் முத்தமிட வேண்டும். அவரது பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். இத்தகைய விஷயங்களை சொல்லும் மக்களின் மனது எவ்வளவு பைத்தியக்காரத்தனமானதாக இருக்கிறது.

இந்த சமூக வலைதளங்கள் எப்போதும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிளப்பவே விரும்புகிறார்கள் என ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இது குறித்து, பேசிய பிரபல நடிகையான கியாரா அத்வானி கிசுகிசு தவறில்லை. ஆனால், ஒருவரை வரைமுறை இல்லாமல் கிசு கிசுக்க கூடாது. தந்தை மகள் பாசத்தில் இருப்போரை அபாண்டமாக இப்படி சொல்வது தவறு. கட்டி பிடித்தல் என்பது அன்பின் வெளிப்பாடு தான். அதில், அற்பதனம் வேண்டாம் என்று அவர் இந்த விவகாரம் தொடர்பாக ஆதரவு தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

