பெரும்பாலும் சருமத்தில் ஏற்படுகின்ற கரும்புள்ளிகள் அழகு சார்ந்த ஒரு பிரச்சினையாகவே கருதப்படுகிறது. இந்த கரும்புள்ளிகள் ஆனது முகம், கை, தோள்பட்டைகள், முதுகு போன்ற பகுதிகளில் கருப்பு நிற புள்ளிகள் போன்று இருக்கும். இதனால், பலரும் இதை சாதாரணமாகவே நினைத்து விட்டு விடுகின்றனர்.

ஆனால், பெரும்பாலும் கரும்புள்ளிகள் தீங்குற்றவை மற்றும் அவை புற ஊதா கதிர்களுடன் தொடர்புடையவை. ஆயினும் சமீபத்திய ஆய்வு ஒன்று சருமத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மிகவும் முக்கியமான உள்ளூருப்பான கல்லீரல் பிரச்சனை ஒரு எச்சரிக்கை என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நமது உடலில் கல்லீரல் மிகவும் முக்கியமான உறுப்பு என்று அனைவரும் அறிந்த விஷயமே.

மங்கலான பார்வையா?.. கண் நலனை காக்க இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க..!
இந்த கல்லீரல் நச்சுக்களை வடிகட்டுவது பித்த நீரை உற்பத்தி செய்வது ஹார்மோன்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் மெட்டபாலிசம் செய்வது போன்ற முக்கிய பணிகளை செய்து வருகிறது. இப்படிப்பட்ட கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை நமது சருமத்தில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு நாம் எளிதாக அறியலாம். அப்படி கண்டறிந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து ஆரம்பத்திலேயே அதனை சரி செய்வது சிறந்தது. கல்லீரல் பிரச்சினைக்கும் சருமத்திற்கு வரக்கூடிய கரும்புள்ளிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கரும்புள்ளிகள்
கரும்புள்ளிகள் பெரும்பாலும் சூரியனின் புற ஊதா கதர்களுடையே தொடர்புடையது என்றாலும், மறுபுறம் கல்லீரல் பிரச்சனையின் அறிகுறியாகவே காணப்படுகிறது. திசுக்களை சுற்றியுள்ள பகுதிகளை விட தோலின் பகுதி மிகவும் கருமையாக இருப்பதை குறிக்கிறது. பெரும்பாலும் இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு அல்லது நச்சுக்களின் தேக்கத்தால் ஏற்படுகிறது. உதாரணமாக நாள்பட்ட கல்லீரல் நோய்க்கும் ஹைப்பர் பிக்மென்டேஷனுக்கும் உள்ள தொடர்பு குறித்து ஆய்வுகளும் உள்ளன.

அதுவும் நாள்பட்ட கல்லீரல் நோயாளிகள் முகத்தில் பெரும்பாலும் அதிகப்படியான நிறங்கள் இருப்பதாக ஆய்வுகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. கரும்புள்ளிகள் கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகளில் இருந்து வேறுபட்டவை.
வயது சார்ந்த கரும்புள்ளிகள்
வயது சார்ந்த கரும்புள்ளிகள் அவை அவற்றின் தோற்றம் தொடக்கம் தொடர்புடைய அறிகுறிகள் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை கொண்டு அறியலாம். அதே வேளையில் வயது சார்ந்த கரும்புள்ளிகள் பல ஆண்டுகளாக படிப்படியாக உருவாகும். மேலும் பெரும்பாலும் வெயில் படும் இடங்களான கைகள் மற்றும் முகத்தில் இந்த கரும்புள்ளிகள் தென்படும்.

இவை மென்மையாகவும் தட்டையாகவும் பிரவுன் நிறத்திலும் மற்றும் வேறு எந்த ஒரு அறிகுறிகளும் சேர்ந்து இருக்காது. அதுவே கல்லீரல் தொடர்பான கரும்புள்ளிகள் பெரும்பாலும் திடீரென தோன்றி பரவக்கூடியது. முக்கியமாக இந்த கரும்புள்ளிகள் முகம் கழுத்து உள்ளங்கை, உள்ளங்கால் மற்றும் சில சமயங்களில் நாக்கு ஆகிய பகுதிகளிலும் இவை பொதுவாக தோன்றும்.
ஹார்மோன் சமநிலையின்மை
கல்லீரல் தான் நமது உடலின் ஹார்மோன் வளர்ச்சிதை மாற்றம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீரல் எப்போது பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் ஹார்மோன் வெளியேற்றும் குறைகிறது. இப்படி ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது அது மெலனின் உற்பத்திக்கு தேவையான மெலனோசைட்டுகள் எனப்படும் செல்களை அதிகப்படியாக தூண்டுகிறது. இந்த சரும நிறத்தை கொடுக்கும் மெலனோசைட்டுகள் அதிகப்படியாக தூண்டப்படும் போது அவை சருமம் கருமையாவதற்கும் சீரற்ற திட்டுகள் ஆக்குவதற்கும் வழி வகிக்கிறது.

சிறுநீரக செயலிழப்பு மற்றும் நச்சு தேக்கம்
ரத்தத்திலிருந்து நச்சுக்களை திறம்பட பிரித்தெடுக்க முடியாமல் போகும் கல்லீரல் வளம் வீணமாக இருந்தால், ரத்தத்தில் நச்சுக்கள் அதிகம் இருந்தால், அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அதாவது, இந்த ஆக்ஸிஜனேற்ற அழுத்தமானது செல்களை சேதப்படுத்தி மெலனோசைட்டுகளைச் செயல்படுத்தி கரும்புள்ளிகள் வர தூண்டுதலாக அமைகிறது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

