பேருந்து நிலையத்தை புறக்கணித்து சாலைகளை ஆக்கிரமிக்கும் தனியார் பேருந்துகள்; சமூக விரோத செயல்களின் கூடாரமாக மாறும் மேம்பாலப் பகுதி.
கோவை மாநகரின் இதயப் பகுதியாக விளங்கும் கணபதி டெக்ஸ்டைல் மேம்பாலத்திற்கு கீழ் தனியார் ஆம்னி பேருந்துகளின் ஆக்கிரமிப்பு உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது.
திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபரீத.. கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!
பிரத்யேக ஆம்னி பேருந்து நிலையம் அருகிலேயே இருந்த போதிலும், விதிகளை காற்றில் பறக்கவிட்டு நஞ்சப்பா சாலை முழுவதும் இந்த பேருந்துகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த “அத்துமீறல் பார்க்கிங்” காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, அவசரத் தேவைகளுக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் கூட நகர முடியாமல் தவித்து வருவது அப்பகுதி மக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த லாரி.. சக்கரத்தில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!
போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க, நள்ளிரவு நேரங்களில் மேம்பாலத்தின் கீழ் நிறுத்தப்படும் இந்த பேருந்துகளில் சிலர் மது அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. “சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் நோக்கில் செயல்படும் இந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மீது காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்பதே அப்பகுதியில் குடியிருக்கும் பகுதிவாசிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

