சூலூர் அருகே பெரியகுளம் படகு இல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் மூதாட்டி மீது லாரி மோதியதில் மூதாட்டி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். முதியவர் படுகாயம் அடைந்தார்.
சூலூர் அருகே ராசி பாளையத்தை சேர்ந்தவர் மணி (65) இவரது மனைவி சரஸ்வதி (63). இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் ராசிபாளையத்தில் இருந்து சூலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணி வலது புறமும், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த சரஸ்வதி லாரி சக்கரங்களுக்குள்ளும் விழுந்தனர்.
திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபரீத.. கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!
அப்போது லாரியின் சக்கரம் சரஸ்வதியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியின் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வு பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

