விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி நடிகர் தனுஷ் உடன் மோதிக்கொண்டது அனைவரும் அறிந்த விஷயம் தான். அவர்கள் திருமண வீடியோவில் நானும் ரவுடிதான் பட வீடியோவை பயன்படுத்த தனுஷ் அனுமதி தரவில்லை என்றும், அது தொடர்பான தனுஷ் குறித்து நயன்தாரா கடும் வார்த்தைகளுடன் அறிக்கை வெளியிட்டதும் சமூக வலைதளங்களில் அந்த சமயத்தில் மிகவும் வைரலானது.

த்ரிஷாவின் ‘லவ்’ போஸ்ட்.. கமெண்ட்டுகளால் நிறையும் சோஷியல் மீடியா..!
இது குறித்து ஒரு பேட்டியில் தனுஷ் குறித்த விக்னேஷ் சிவன் கூறியதாவது: தனுஷாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு நடிகர் என்பது மட்டும் இல்லாமல் அவரை ஒரு பெரிய உயரத்தில் வைத்து நான் பார்த்து வருகிறேன். அவரது பிறந்தநாள் ஜூலை 28 அதே தேதி தான் என் அப்பா இறந்த நாள். அதனால், தனுஷ் சாரிடம் நான் என் அப்பாவை பீல் செய்கிறேன் என்றும், அந்த அளவுக்கு அவர் மீது எனக்கு அன்பு இருக்கிறது.

தடைகளை உடைத்து தடம் பதிக்கும் லீடர்.. தியேட்டர்களில் அலைமோதும் கூட்டம்.. !
அதன் பிறகு நமக்குத் தெரியாமல் சிலருடன் புரிந்து கொள்ள முடியாத வகையில் சுவிட்சுவேஷன் அமைந்துவிடுகிறது. அது என்னுடைய மிகப்பெரிய இழப்பாக நான் கருதுகிறேன். நல்ல உறவுடன் இருக்கும் ஒருவரை நாம் இழக்கிறோம் என்றால் அது பெரிய சேம் என நினைக்கிறேன். எங்கேயோ தவறு நடந்திருக்கிறது. நான் இங்கே இருக்கிறேன். எனக்கென ஒரு வாழ்க்கை இருக்கிறது என்று அல்லா அதற்கு 100% தனுசார் முக்கியமான ஒரு ஆள்.

விஐபி ஷூட்டிங் நேரத்தில் இரண்டு அரை வருடம் தனுஷாருடன் நான் தங்கி இருந்தேன். அவருடன் இனிமையான பல நினைவுகள் எனக்கு இருக்கிறது. ஆனால், ஒரு கட்டத்தில் எல்லாமே தவறாக போய் முடிந்து விட்டது. ஒரு விஷயத்தை நினைத்து என் வாழ்க்கையில் அதிகம் வருத்தப்படுகிறேன் என்றால், அது தனுஷ் சார் நட்பை நான் இழந்ததுதான். ஒரு பிரச்சனையிலிருந்து இரண்டு பேர் பிரிந்தால் அதை சரி செய்ய முடியும். ஆனால், பிரச்சனையே இல்லாமல் பிரிந்தால் அதை எப்படி சரி செய்ய முடியும் என்று விக்னேஷ் சிவன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

