தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ், இவரது மகன் பெனிக்ஸ் செல்போன் கடை நடத்தி வந்தார். கொரோனா காலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19 கட்டுப்பாடு நேரத்தை மீறி கடை நடத்தியதாக இருவரையும் விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.
‘அந்த’ ஒரு வார்த்தை.. விசில் சின்னத்தின் ரகசியத்தை உடைத்த செங்கோட்டையன்..!
அங்கு இரவு முழுதும் போலீசார் அடித்ததில் முதலில் பெனிக்ஸ் அடுத்தது ஜெயராஜ் உயிரிழந்தனர். தொடர்ந்து கொலை வழக்காக பதிவு செய்த இந்த வழக்கை சிபிஐ காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ், பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 10 பேரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

பணம் பதுக்கலா?.. அதிமுக வேட்பாளருக்கு சொந்தமான கல்லூரியில் வருமானவரித்துறை சோதனை..!
இதில், பால்துரை என்பவர் மதுரை சிறையிலே உயிரிழந்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த வழக்கு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், 1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்த நிலையில் வழக்கின் விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

அதில், இது சாதாரண குற்றம் அல்ல, இரவு முழுவதும் தந்தை மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக அடித்துள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இது நடந்துள்ளதாகவும், வெறும் ஆயுல் தண்டனை வழங்கினால் அச்சம் இருக்காது என்று தெரிவித்தார். தொடர்ந்து வழக்கில், கைதான 9 பேருக்கும் மரண தண்டனையும், இத்துடன் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு மரண தண்டனையும் மற்றும் 84 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தார். பாதிக்கப்பட்ட பினிக்ஸ் இன் தயாருக்கு 1.04 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க ஆணையும் பிறப்பித்தார். தீர்ப்பை வாசித்து முடித்ததும் பேனா நுனியை நீதிபதி முத்துக்குமரன் முறித்தது குறிப்பிடத்தக்கது.

