ஆண்கள் ஆகட்டும் பெண்கள் ஆகட்டும் முகம் குறித்த அழகு குறிப்புகளை ஆவலோடு தேடுவார்கள். பொதுவாக செயற்கையான பொருட்களை மட்டுமே நாம் பயன்படுத்தி வருகிறோம். அதற்கு மாறாக வீட்டிலே செய்யக்கூடிய நிறைய பேஸ் பேக் பொருட்கள் உள்ளன. இயற்கையான பொருட்களை வைத்து முகத்தை எப்படி பளபளப்பாகலாம் என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.
வறண்ட சருமமா?.. இரவில் ‘இதை’ மட்டும் செய்யுங்கள்..!
பாசிப்பருப்பு

சமையலறையில் இருக்கக்கூடிய பாசிப்பருப்பு அல்லது பயித்தம் பருப்பு என்று அழைக்கப்படும். இந்த பருப்பு முகத்திற்கு அதிகப்படியான பொலிவை கொடுக்கக்கூடியது என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா? உங்களுடைய சருமத்தை பளபளப்பாகவும் சருமத்தில் உள்ள மாசுகளை அகற்றுவோம் இது பயன்படுகிறது. அதற்கு உங்களுடைய முதலில் உங்களுக்கு தேவையான அளவு பாசிப்பருப்பை எடுத்து அதை நன்றாக சுத்தப்படுத்தி கழுவி வெயிலில் காய வைத்துக் கொள்ளவும். பிறகு ஈரப்பதம் இல்லாதவாறு அதனை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனை தினசரி குளிக்கும் சோப்பிற்கு பதிலாக உங்கள் சருமத்தில் தேய்த்து குளித்து வந்தால் பளபளப்பான சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை நீங்கள் பெறலாம். பாசிப்பருப்பு உங்கள் முகத்தை பொலிவாகவும் மென்மையாக வைத்திருக்கவும் உதவுகிறது.
வேப்பிலை

இன்றைய இளம் தலைமுறைக்கு சிறு வயதிலேயே முகத்தில் முகப்பருக்கள் கருமை அதிகமாக ஏற்படுகிறது. இதற்கு காரணம் அதிகப்படியான டென்ஷன், மன அழுத்தம், நீர் பற்றாக்குறையை ஆகும். நாம் வீட்டில் அருகிலே இருக்கக்கூடிய வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. முகப்பொலிவை விரும்புபவர்கள் வேப்பிலையை நன்றாக அலாசி மிக்ஸியில் பேஸ்ட் ஆகும் வரை அரைக்கவும். இதனை முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் இருக்கும் இடத்தில் தேய்ப்பதன் மூலம் பருக்கள் நீங்கியும், கருப்பு திட்டுக்கள் நீங்கி பளபளப்பாகவும், முகம் பிரகாசமாக ஜொலிக்கும். வேப்பிலை இதற்கு நல்ல பலன் தரக்கூடியது.
கற்றாழை

சிலருக்கு அதிகப்படியான வறட்சி இருக்கும் அவர்கள் கற்றாழை பயன்படுத்துவதன் மூலம் முகத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்ளலாம். செயற்கையாக வெயிலில் வாங்கும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதை தவிர்த்து இயற்கையாக நம் வீட்டிலேயே செய்வது சிறந்தது. அதற்கு, ஒரு நீள கற்றாழையை எடுத்து அதன் தோல்களை சீவி விட்டு நன்கு கழுவி பேஸ்ட் ஆகும் வரை அரைத்துக் கொள்ளவும். பின்னர், அதனை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும். 10 நிமிடம் வைத்திருந்து பின்னர், முகத்தை கழுவவும் பளபளப்பான மற்றும் பொலிவான சருமம் கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய்

முகத்தின் பளபளப்பை அதிகரிப்பதற்கு நம் வீட்டில் இருக்கக்கூடிய தேங்காய் எண்ணெய் சிறந்தது. தேங்காய் எண்ணெய் முகத்தில் தேய்க்க மசாஜ் செய்வதன் மூலம் பளபளப்பான மற்றும் பொலிவான ஈரத்தன்மை உடைய முகத்தை பெறலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள இந்த நான்கு பொருட்களுமே இறக்கையாகவே உங்கள் முகத்தை அழகுபடுத்தும். எந்தவித பக்கவிளைவும் இதில் ஏற்படாது. இவ்வாறு இயற்கையாக கிடைக்கும். பொருட்களை வைத்து உங்களுடைய முகத்தை நீங்கள் அழகுபடுத்திக் கொள்ளலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

