இந்தியத் தடகள உலகின் முன்னணி வீரரான முரளி ஸ்ரீசங்கர், பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்திய தடகளத் தொடரில் மீண்டும் ஒருமுறை தனது முத்திரையைப் பதித்துள்ளார்.
ஏன் தொடர் தோல்விகளைச் சந்திக்கிறது சிஎஸ்கே? – ரசிகர்கள் கேட்கும் கேள்விகள்!
ஞாயிற்றுக்கிழமை ஏப்ரல் 5 மாலை நடைபெற்ற நீளம் தாண்டுதல் இறுதிப் போட்டியில், ஸ்ரீசங்கர் தனது மூன்றாவது முயற்சியில் 8.15 மீட்டர் தூரத்தைத் தாண்டி முதலிடத்தைப் பிடித்தார். இதன் மூலம் அவர் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியதுடன், தனது சிறப்பான ஃபார்மை மீண்டும் நிலைநாட்டியுள்ளார்.

ஆசியப் போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் தகுதிக்கான போட்டிகள் நெருங்கி வரும் வேளையில், ஸ்ரீசங்கரின் இந்த 8.15 மீட்டர் சாதனை இந்தியத் தடகளத் துறைக்கு ஒரு பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. தற்போதைய சர்வதேச தரவரிசையில் முன்னேற இந்த வெற்றி அவருக்குப் பெரும் உதவியாக இருக்கும்.

