தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் அதிமுக வேட்பாளருக்குச் சொந்தமான கல்வி நிறுவனத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருப்பு உடையில் கார்ஜியஸ் லுக்.. தீயாய் பரவும் ஹன்சிகாவின் பிளாக் அவுட்ஃபிட்..!
கல்லூரியில் குவிந்த அதிகாரிகள்
திருச்சி கிழக்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் ஜி. ராஜசேகரனுக்குச் சொந்தமான ‘இந்திரா கணேசன் கல்வி நிறுவனங்கள்’ திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே அமைந்துள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சுமார் 6 மணியளவில், வருமானவரித் துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் திடீரென இந்தக் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்து சோதனையைத் தொடங்கினர்.
கையிருப்பு வெறும் 50 ஆயிரம் தான்.. சுந்தர்.சி மற்றும் குஷ்புவின் சொத்து மதிப்பு..!
பணம் பதுக்கலா?
தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காகப் பெருமளவிலான பணம் கல்லூரியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரைத் தொடர்ந்து இந்தச் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தச் சோதனையில், முக்கிய ஆவணங்கள் மற்றும் கணினிப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன.
சோதனையின் முடிவில் ஏதேனும் பணம் அல்லது ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

