தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.
எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன. முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு பின்னர் இணையதளத்தில் அதிகம் தேடப்படும் நடிகையாக மாறி இருப்பவர் த்ரிஷா.

வசூலில் மாஸ் காட்டும் யூத்.. 15 நாட்களைக் கடந்தும் குறையாத வசூல் வேகம்..!
அதற்கு காரணம் தவெக கட்சி தலைவரும் நடிகருமான விஜயிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என விஜய் மனைவி சமீபத்தில் தாக்கல் செய்த மனுவில் விஜய் ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறி உறவில் இருப்பதாக கூறியிருந்தார். இந்த விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.
கல்யாணமே முடிஞ்சிருச்சு?.. மீண்டும் கிளம்பிய த்ரிஷா – விஜய் விவகாரம்.. ஆதாரங்களை அடுக்கிய பிரபலம்?..

த்ரிஷா மற்றும் விஜய்க்கு எதிரான கருத்துக்கள் நிறைவு வருகின்றன. ஆனால், இரண்டு பேருமே சைலண்டாக அந்த விஷயத்தை கடக்கிறார்கள். இந்த பிரச்சினை வந்ததிலிருந்து திரிஷா என்ன செய்தாலும், அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. முக்கியமாக, அவர் வைக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஏதேனும் மறைமுகமாக உணர்த்துகிறாரா என்றும் உற்று நோக்குகின்றார்கள்.
பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!
இந்த நிலையில், தற்போது திரிஷா வளர்த்து வரும் ஒரு நாயை அனுமன் ஜெயந்தியான ஏப்ரல் இரண்டாம் தேதி அனுமன் கோவிலுக்கு அழைத்து சென்று வழிபாடு நடத்தினார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தையும் த்ரிஷா பகிர்ந்து தனது செல்லப்பிராணி முதல் முறையாக கோவிலுக்கு வருவதாக பதிவிட்டு இருந்தார்.

தனது செல்ல பிராணியுடன் திரிஷா கோவிலுக்கு சென்றதாக குறிப்பிட்டு இருந்தார். அவர் தனது செல்ல பிராணியுடன் பகிர்ந்து கொண்ட புகைப்படம் ஆனது குளோசப்பில் இருப்பதால் ரசிகர்கள் பலரும் செல்லப் பிராணியை கோவிலுக்குள் அழைத்து சென்றாரா என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக பக்தர்கள் கோவில்களில் எப்படி ஒரு நாயை அழைத்துக் கொண்டு செல்லலாம் என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் பைரவரை வணங்குவது என்பது நாயை தெய்வமாக வழிபடும் முறைதான். அப்படி இருக்கையில், நாயை கோவிலுக்குள் அழைத்து செல்வதில், எந்த தவறும் இல்லை என்றும் த்ரிஷாவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.

பொதுவாக தனது செல்லப்பிராணியை முதல் முறையாக கோவிலுக்கு வந்துள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அதே நேரத்தில், திரிஷா பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது அவர் அந்த புகைப்படத்தை அதாவது செல்லப்பிராணியுடன் காருக்குள் அமர்ந்தபடி எடுத்துக் கொண்டதாகத்தான் தெரிகிறது.

