மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், சென்னை – கோவை விமான கட்டணம் ரூபாய் 16 ஆயிரத்து 500 ஆக உயர்ந்தது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை மற்றும் புறநகரப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலானோர் மூன்று நாட்கள் தொடர் விடுமுறையை கழிப்பதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கும் விமானங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ய தொடங்கினர்.
பரீட்சை நடக்கும்போது பாட்டுச் சத்தமா? கலைவிழா சத்தத்தால் ஜே.இ.இ தேர்வில் குளறுபடி..!
இதே போல் அதிக அளவில் ஆன பயணிகள் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்ததால்,சென்னையில் இருந்து கோவைக்கு வரும் விமானங்கள் நேற்று டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்து உள்ளது.இந்நிலையில் சென்னை – கோவை இடையே ரூபாய் 4,966 ஆக இருந்த கட்டணம் ரூபாய் 16 ஆயிரத்து 496 ஆக உயர்ந்து உள்ளது.
யூடியூப் பார்த்து சாராயம் காய்ச்சிய நபர்கள்.. பிடிபட்ட 3 பேர் சிறையில் அடைப்பு..!
ஏற்கனவே விமான எரிபொருள் விலை அதிகரித்து இருப்பதால், விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு இருந்தன.இந்நிலையில் தொடர் விடுமுறை என்பதால் உள்நாட்டு விமான கட்டணங்கள், சர்வதேச விமான கட்டணங்கள் அளவுக்கு உயர்ந்து விட்டதால், பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

