நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கூட்டத்திற்கு சென்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், இது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வாக மாறியது. இது தொடர்பான விசாரணையும் தற்போது சிபிஐயில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, விஜியின் இறுதி படமான ஜனநாயகன் படத்தின் ஷூட்டிங் நடத்த பல ஏற்பாடுகள் செய்யப்பட்டதாகவும், படப்பிடிப்பு நடைபெற்றதாகவும் பிரபல பத்திரிகையின் தலைமை ஆசிரியர் கோபால் குற்றச்சாட்டுகளை எழுப்பி இருந்தார். மேலும், கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிபிஐ என்னை விசாரித்தால் நான் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக இருக்கிறேன் என்றெல்லாம் பேட்டிகளிலும் அவர் தெரிவித்திருந்தார்.

சாவிலும் விமர்சனமா?.. நான் நாத்திகன் தான், ஆனால் என் அம்மா.. விமர்சகர்களின் வாயடைத்த பிரகாஷ் ராஜ்..!
அதேபோல், தமிழக வெற்றிக்கழகத்தின் தரப்பில் ராஜ் மோகன் கூறும் போது படப்பிடிப்பு நடக்கவில்லை. அதற்கான ஒத்திகை மட்டும் நடைபெற்றது என்று கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி கிழக்கில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரம் மேற்கொண்ட தவெக தலைவர் விஜய், கரூர் துயர சம்பவம் மற்றும் ஜனநாயகன் பட ரிலீஸ் தாமதம் உள்ளிட்டவை குறித்து பேசி இருந்தாலும், கரூர் துயர சம்பவத்தில் ஜனநாயகன் படத்திற்கான படப்பிடிப்பு எதுவும் நடைபெறவில்லை என்று வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

‘இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்க போறாறோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!
ஆனால், சிபிஐ வசம் வழக்கு உள்ளதால் இது தொடர்பான விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் வெளிப்படையாக பேச வேண்டாம் என்று விஜய் நினைத்திருக்க கூடும் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளிலும் விஜய் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

