நடிகர் பிரகாஷ்ராஜின் தாய் சுவர்ணலதா ராய் கடந்த மார்ச் 30ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். கிறிஸ்துவ முறைப்படி அவரது இறுதி சடங்கு செவ்வாய்க்கிழமை பெங்களூரில் உள்ள புனித மைக்கேல் தேவாலயத்தில் நடைபெற்றது.
இதை சிலர் விமர்சனம் செய்து பிரகாஷ்ராஜ் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எந்த கடவுளையும் நான் வணங்க மாட்டேன் என்று பேட்டி அளித்த வீடியோவையும் போட்டு கிறிஸ்தவ முறைப்படி நடந்த சடங்கு வீடியோவையும் போட்டு தன்னை ஒரு ‘நாத்திகவாதி’ என்று சொன்னவர் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு இருந்தது.

இந்த பதிவு இணையதளத்தில் பேசுபொருளான நிலையில், இதற்கு பிரகாஷ்ராஜ் சமூக வலைதள பக்கத்தில் பதிலளித்துள்ளார். அதில், ஆம் நான் கடவுளை நம்புவதில்லை. ஆனால், என் தாய் கடவுளை நம்பினார். நான் அந்த நம்பிக்கையின் படியே அவரை நல்லடக்கம் செய்துள்ளேன். அவரது உரிமையை அவருக்கு மறுக்க நான் யார் இதுவே நாம் ஒருவருக்கொருவர் அளித்துக்கொள்ளும் அடிப்படை மரியாதை என்று பதிவிட்டிருந்தார்.
அடியாத்தி இது என்ன பீலு… தனுஷ் ‘அந்த’ விஷயத்தில்.. சம்யுக்தா Open Talk..!
மேலும், வெறுப்பை கொடுக்கும் அரக்கர்களாகிய நீங்கள் இதை உணர்வீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார். அது மட்டும் இல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியும் அவரது தாயார் ஹீரா பெண்ணியையும் கேலி செய்ததாக கூறப்படும் ஒரு போலி ஸ்கிரீன்ஷாட்டையும் அதில் பகிர்ந்த பிரகாஷ்ராஜ் அந்த பிட் முற்றிலும் புனையப்பட்டது ஏப்ரல் பூல் தினத்தன்று என் பெயரில் ஒரு போலி ட்விட்டின் ஸ்கிரீன்ஷாட்டை உருவாக்கி இருந்தார்கள்.

‘இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்க போறாறோ’.. விஜய்யை சீண்டிய வாகன ஓட்டி; பதிலடி கொடுத்த பெண்மணி..!
தங்கள் சொந்த தலைவரையே அவமதிக்கும் இவர்கள் மதவெறியர்கள், முட்டாள்கள் என கடுமையாக சாடி இருந்தார். அதே நேரம், இந்த துயரமான நேரத்தில் எனக்கும் என் குடும்பத்திற்கும் மிகவும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Yes. I don’t believe in god .. but my mother believed in her god . Who am i to deny her .. the right to be buried according to her belief. This is the basic respect we give one another. Will you Hate mongering monsters understand this #justasking https://t.co/vD1GhySf3M
— Prakash Raj (@prakashraaj) April 2, 2026

