நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கூட்டத்திற்கு சென்ற குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 41 பேர் உயிரிழந்த நிலையில், இது மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒரு நிகழ்வாக மாறியது. இது தொடர்பான விசாரணையும் தற்போது சிபிஐயில் நடைபெற்று வருகிறது.
விஜய் நேர்ல வந்ததும்.. அதிகாரியின் ‘அந்த’ ரியாக்ஷன் தான் இப்போது ஹாட் டாபிக்..!
அதே போல், சேலம் பிரச்சார கூட்டத்திலும் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்யும் போது விஜயின் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற இளைஞர் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த காவல்துறையின் வாகனத்தில் மோதி தீவிர சிகிச்சை பிரிவு இருந்து அவரும் உயிரிழந்தார்.

இதற்கெல்லாம் முன்னதாக, முதல் மாநாடு மற்றும் இரண்டாவது மாநாடு என இதுவரையிலும் தமிழக வெற்றிக்கழகத்தின் அரசியல் நடவடிக்கைகளால் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் விஜய் இன்று திருச்சியில் தனது வேட்பு மனு தாக்கல் செய்ய சென்னையில் உள்ள தனது வீட்டிலிருந்து புறப்பட்டு விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது விஜயின் வாகனத்தை பார்த்த ஒரு வாகன ஓட்டி இன்னும் எத்தனை வீட்டு தாலி அறுக்கப் போறாரோ என்று ஒருமையில் பேசி விமர்சித்து இருந்தார்.

இவரது விமர்சனத்தை கேட்டு விஜயின் ஆதரவாளர்களில் ஒரு பெண் உடனே அந்த ஆணுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவரை காட்டமாக விமர்சித்து பேசி இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகிறது. அதில் குறிப்பாக, அந்த பெண் தேவையில்லாமல் பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டு கடுப்பாகி சில வார்த்தைகளையும் பயன்படுத்தினார். அதுவும் சாலையில் வாகனத்தில் அந்த நபரை துரத்தி பிடித்து விமர்சித்து இருந்தார்.

