கோவையை சேர்ந்த தங்க நகை வடிவமைப்பாளர் UMT ராஜா, தனது தனித்துவமான கலைப்படைப்புகளுக்காக அறியப்படுபவர். கமல்ஹாசனின் உருவப்படத்தை முத்தங்களால் உருவாக்கியது, தேர்தல் விழிப்புணர்வுக்காக 2 கிராம் தங்கத்தில் பூட்டு-சாவி வடிவமைத்தது, தர்பூசணியில் சுதந்திர தியாகிகளை செதுக்கியும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்.
RTO அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. ஒரு மணி நேர சோதனையில் அம்பலமான உண்மை..!
இந்த நிலையில், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100% அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு 100% “எனது வாக்கு, எனது உரிமை” என எழுதியும், கைவிரலில் மை இருப்பதுபோல, வாயில் பிரஷை வைத்து வெள்ளைத்தாளில், வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் குழந்தை உட்பட மூன்று பேர் அமர்ந்திருக்கின்றனர். யாரும் ஹெல்மெட் அணியவில்லை. போக்குவரத்து விதிமுறைகளை மீறி, இருசக்கர வாகனத்தை இயக்கியவாறு, விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் என்கிற பெயரில், உயிருக்கு ஆபத்தான முறையில் செயல்படுவதை காவல்துறை கண்டிப்பதோடு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

