வரும் ஏப்.,23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழக அரசியல் கட்சிகள் பம்பரம் போல் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
குறிப்பாக திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பரப்புரை செய்து வருகின்றனர். இதனிடையே பாஜக, காங்கிரஸ் கட்சி மட்டும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை,
இதனிடையே தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கோவையில் சிங்காநல்லூர் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கு குறி வைத்திருந்தார். ஆனால் அதிமுக தரப்பில் கோவை வடக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது.
இதனால் விரக்தியில் இருந்த அண்ணாமலையை, மேலிடம் சமரசம் செய்து, இந்த முறை கோவை வடக்கு அல்லது மொடக்குறிச்சியில் நிற்க வைக்க கோரிக்கை வைத்துள்ளது.
கரூர் கூட்டத்தில் ஜனநாயகன் ஷூட்டிங்? திருச்சியில் விஜய் Open Talk..!
ஆனால் அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஏதேனும் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
இதனிடையே கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமாரை , அண்ணாமலை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிட்டிங் எம்எல்ஏவாக உள்ள அருண்குமாரை சந்தித்தது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அண்ணாமலை, மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 மக்களவை தேர்தலில் கவுண்டம்பாளையம் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டு நான்கரை லட்சம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

