தமிழ் சினிமாவில் 90களில் மிகவும் பிரபலமான இயக்குனராக வலம் வந்தவர் விக்ரமன். புதுவசந்தம், சூரிய வம்சம், வானத்தைப்போல, பூவே உனக்காக என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். அவர் படத்தில், நடித்து விட்டால் போதும் ஃபேமிலி ஆடியன்ஸை ஈசியாக பிடித்து விடலாம் என்று அனைத்து ஹீரோக்களும் அவர் இயக்கத்தில் நடிக்க ஆசைப்பட்டார்கள்.

முன்னதாக தொடர்ச்சியாக, ஹிட் கொடுத்த அவர் ஒரு காலகட்டத்தில் மார்க்கெட்டை இழந்தார். தற்போது, சினிமாவிலிருந்து விலகி தனது குடும்பத்துடன் நிம்மதியாக இருக்கும் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசுகையில், சூர்யா, லைலா நடித்த உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் தான் நடிக்க இருந்தாராம்.

அவரை வைத்து என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலையும் ஷூட் செய்து இருக்கிறார். ஆனால், படத்தின் கிளைமாக்ஸில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. எனவே விக்ரமணியிடம் சென்று அந்த கிளைமாக்ஸ் மட்டும் மாற்ற முடியுமா? என விஜய் கேட்டாராம்.

பிரிகிறதா குடும்பம்?.. விஜய்க்கு ஆதரவு தெரிவித்த சிபிராஜ்: மவுனம் கலைத்த திவ்யா சத்யராஜ்..!
அதற்கு விக்ரம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மாற்றமுடியாது. அப்படியே மாற்றினால் ஈடுபாடு இல்லாமல் தான் இந்த படத்தில் நான் வேலை செய்வேன் என சொல்ல சரி நான் படத்திலிருந்து விளக்குகிறேன் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி விஜய்யும் அந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம்.

“Finally in the same city”.. அந்த விஷயத்திற்கு நன்றி.. திரிஷா இப்படி உருகிருக்காங்களே..!
விக்ரமனும் விஜய் தரப்பு நியாயத்தை புரிந்து கொண்டு டீசண்டாக அனுப்பி வைத்தாராம். இந்நிலையில், ரசிகர்கள் இதெல்லாம் சினிமாவுல சாகசம் ப்பா என்பது போல் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு தான் விஜய் நடித்திருந்த என்னை தாலாட்டும் சங்கீதம் பாடலின் வீடியோவை விக்ரமன் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

