மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஒரு இக்கட்டான நிலையை எட்டியுள்ளது. ஈரான் ராணுவம் இன்று வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கையில், அங்குள்ள அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் நிதி நிறுவனங்களை இலக்கு வைப்பதாகப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழிவாங்கும் நடவடிக்கை: ஈரானின் எச்சரிக்கை
ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, “ஈரானியப் பிரதிநிதிகள் அல்லது முக்கிய நபர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் செயல்படும் முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் சேதப்படுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாருடைய உதவியும் எங்களுக்குத் தேவையில்லை.. ஸ்பெயினின் வான்பரப்புத் தடையால் அமெரிக்கா ஆவேசம்..!
இந்த மிரட்டலைத் தொடர்ந்து, குறிப்பிட்ட அந்த நிறுவனங்களின் அலுவலகங்களைச் சுற்றி 1 கிலோமீட்டர்சுற்றளவில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்புக் கருதி வெளியேறுமாறு சமூக வலைதளங்களில் எச்சரிக்கைகள் பரவி வருகின்றன.
இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய நிறுவனங்கள்
ஈரான் ராணுவத்தின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படும் சில முக்கிய அமெரிக்க நிறுவனங்கள்:
- டெக்நிறுவனங்கள்: Google, Meta, Apple, Microsoft, Nvidia, Intel, Cisco, Oracle, Dell, IBM.
- நிதிமற்றும்உற்பத்தி: Tesla, JPMorgan Chase, General Electric, HP.
- விமானப்போக்குவரத்து: Boeing (மத்திய கிழக்கின் 2 முக்கிய மையங்கள்).
உலகளாவிய பொருளாதார பாதிப்பு
இந்த மிரட்டல் செய்தி வெளியான உடனேயே சர்வதேச பங்குச்சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $115-ஐக் கடந்துள்ளதால், இது உலகளாவிய பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கத் தரப்பில் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை என்றாலும், அங்குள்ள தூதரகங்கள் ‘High Alert’ நிலைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
பொறுப்புத்துறப்பு: இச்செய்தி சர்வதேச ஊடகங்கள் மற்றும் ஈரான் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது.

