தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப் 23 அன்று நடைபெற உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், அதிமுகவில் உள்ள பாஜக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து ஆலோசிக்க நேற்று பியூஷ் கோயல் சென்னை வந்தார்.
கமலாலயத்தில் நடத்திய ஆலோசனையின் போது, அண்ணாமலை மீண்டும் போட்டியிட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கோரிக்கையை முன் வைத்ததாக கூறப்படுகிறது
இனி உங்க வங்கி கணக்கை மாற்றாமல் வேறு வங்கிக்கு சுலபமாக மாற்றலாம்.. ஆர்பிஐ முக்கிய அறிவிப்பு!
இதனால் அண்ணாமலையை களமிறக்க தலைமை முடிவு செய்துள்ளது. அதே சமயம், கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த அண்ணாமலைக்கு, கோவை வடக்கு தொகுதி கிடைக்கும் என ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் மொடக்குறிச்சி தொகுதியை ஒதுக்கலாம் என பியூஷ் கோயலிடம் தேர்தல் மையக்குழுவினர் கூறியுள்ளனர். நேற்றைய கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்ற நிலையில், அவரிடம் நேராகவே தேர்தலில் களமிறங்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளதாக பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

இதை ஏற்ற அண்ணாமலை, கோவை மக்களவை தொகுதிக்குட்பட்ட ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் என கூறியுள்ளார். இதனிடையே கோவை வடக்கு தொகுதியில் வானதி சீனிவாசன் சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளதால், அவர் அடம்பிடித்தால், மொடக்குறிச்சி தொகுதியை அண்ணாமலைக்கு ஒதுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

