கேரவனுக்குள் தனக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் இருந்து என நடிகையின் புகாரையடுத்து பிரபல இயக்குநரை போலீசார் கைது செய்தனர்.
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கைது செய்யப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
படப்பிடிப்பு தளத்தில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த புகாரில், ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது இயக்குநர் தன்னை தனியாக ஒரு கேரவனுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து திங்கள்கிழமை கொச்சி நகர காவல்துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இடுக்கி மாவட்டத்தில் இருந்த ரஞ்சித் கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் தொடுபுழாவில் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் விசாரணைக்காக அவரை விரைவில் கொச்சி நகர காவல்துறையிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காங்., எம்பி மாணிக்கம் தாகூர் திடீர் ராஜினாமா : அதிரும் அரசியல் களம்!
இதற்கிடையில், குற்றச்சாட்டை முன்வைத்த நடிகையின் வாக்குமூலம் திங்கள்கிழமை மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து போலீசார் உடனடி நடவடிக்கை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், மலையாள திரைப்படத் துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் குறித்து கே. ஹேமா தலைமையிலான குழு வெளியிட்ட அறிக்கைக்கு பின்னரும், ரஞ்சித்துக்கு எதிராக இதற்கு முன்பும் குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு, 2024ஆம் ஆண்டு கொச்சி நகர காவல் ஆணையரிடம் ஒரு பெங்காலி நடிகை அளித்த புகாரின் பேரிலும் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த புதிய கைது சம்பவம், மலையாள திரையுலகில் நடைபெறும் குற்றச்சாட்டுகள் மீதான கவனத்தை மீண்டும் அதிகரித்துள்ளது.

