தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி வேட்பாளர் நடிகர் விஜயின் நெருங்கிய நண்பருமான ஸ்ரீநாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்திக்கையில், நான் தூத்துக்குடியில் போட்டியிட வேண்டும் என்பது தலைவரும் தமிழக வெற்றிக்கழகமும் இணைந்து எடுத்த முடிவு என்றார்.

மேலும், தலைவருக்கு தெரியும் யார் யாரை எங்கு வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்றும், என்னுடைய ஆசை வேறொன்றாக இருந்தாலும், தலைவர் சொல்லியதால் இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். அது மட்டும் இல்லாமல் நான் பிறந்த ஊர் நான் பிறந்த மண் அதனால், நான் இங்கு போட்டியிடுகிறேன். விஜய் தலைவராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் தலைவராக நடந்து கொள்கிறார்.

அதே நேரத்தில், நண்பராக நடந்து கொள்ள வேண்டிய இடத்தில் நண்பராக நடந்து கொள்கிறார். அதிமுகவில், முன்னாள் அமைச்சர் திமுகவின் தற்போதைய அமைச்சர் என இரண்டு அமைச்சர்கள் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார்கள் களம் மிகவும் சூடாகத்தான் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும் என்று நான் நம்புகிறேன். வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் எனக்கு முத்தம் கொடுத்து வெற்றியுடன் வா நண்பா என்று தலைவர் விஜய் அனுப்பினார்.
மேஜிக் ஒர்க் அவுட் ஆகுமா?.. பாலிவுட்டில் முன்னணி ஹீரோவுக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!

மாற்று கட்சியினர் களத்தில் எவ்வளவு அநாகரிகமாக நடந்து கொண்டாலும் நாங்கள் நாகரிகமாக தான் நடந்து கொள்வோம். எங்கள் தலைவர் எங்களை அப்படித்தான் ஆளாக்கியுள்ளார். தென்மாவட்டத்தில் சாதிய கலவரங்களை தடுக்கும் தடுக்கவும் எங்களிடத்தில் திட்டங்கள் உள்ளன.

அதை விரைவில், வெளியிடுவோம் என்று அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.

