மன்சூர் அலிகான் எப்பொழுதுமே அவருடைய மனதில் பட்டதை பேசி விடுபவர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே அது பல சமயங்களில் அவருக்கு எதிராகவே திரும்பி இருக்கிறது. அந்த வகையில்,லியோ படத்தை முடித்துவிட்டு த்ரிஷா பற்றி பேசினது சர்ச்சையான அதை அடுத்து, அவருக்கு த்ரிஷா உட்பட அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள்.

வெல்கம் அண்ணா.. சுந்தர் சி-யின் இன்ஸ்டாகிராம் என்ட்ரியை வரவேற்ற ஆர்த்தி ரவி..! (வீடியோ)
இந்த விவகாரத்தில் நிலைமை விபரீதமானதால், தனது வருத்தத்தையும் மன்சூர் அலிகான் அதை தொடர்ந்து பதிவிட்டு இருந்தார். ஒரு வழியாக அந்தப் பிரச்சனையும் ஓய்ந்தது. அதனை தொடர்ந்து, மன்சூர் அளிக்கான் அரசியலுக்கும் வந்தார். ஆரம்பத்தில் நாம் தமிழர் கட்சிக்கு தனது ஆதரவை கொடுத்து தேர்தலை எதிர்கொண்டவர் திடீரென அந்த கட்சியில் இருந்து விலகி தனி கட்சி ஆரம்பிக்கவும் தொடங்கினார்.

அவர் எவ்வளவுதான் அரசியல் களத்தில் பேசினாலும், அவரது பேச்சுக்கள் அனைத்தும் மீம் மெட்டீரியல் ஆகவே அமைந்தன. மேலும், மன்சூர் அலிகான் பேச்சுக்கள் மட்டுமின்றி அவரது செயல்பாடுகளும் அப்படித்தான் இருக்கிறது. இந்நிலையில், அவரது புதிய செயல் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியது.
ஆரம்பமே இப்படியா?.. அந்த நிபந்தனையால் பெற்றோரிடம் மல்லுக்கட்டிய மிருணாள் தாகூர்..!
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் பரப்புரைக்காக திருச்சி சென்ற அவர் அப்போது கல்லக்குடி ரயில் நிலையத்திற்கு சென்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி எப்படி ஹிந்தி திணிப்புக்கு எதிராக போராட்டத்தின் போது அந்த ரயில் நிலைய தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தாரோ அதேபோல், இவரும் செய்தார். நல்வாய்ப்பாக அந்த சமயத்தில் ரயில் எதுவும் வரவில்லை. அவர் இப்படி செய்யும் பொழுது கலைஞர் கருணாநிதியும் இப்படித்தான் செய்தார் என கூறினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

