குவஹாத்தி: ஐபிஎல் 2026-ன் பரபரப்பான 3-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 128 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி, வெறும் 12.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி சிஎஸ்கே-விற்கு அதிர்ச்சியளித்தது.
துக்கம் தாளாமல் சென்னை அணி ஜெர்சிக்கு முத்தமிட்ட RR வீரர் ஜடேஜா.. வைரலாகும் வீடியோ!
சிஎஸ்கேபேட்டிங்சரிவு
குவஹாத்தியில் உள்ள ஏசிஏ (ACA) மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்குத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (6) மற்றும் முன்னணி வீரர்கள் வரிசையாக அவுட் ஆகி வெளியேறினர்.
ராஜஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் நந்த்ரேபர்கர் மற்றும் ஜோஃப்ராஆர்ச்சர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி சிஎஸ்கே-வின் முதுகெலும்பை உடைத்தனர். ஒரு கட்டத்தில் 100 ரன்களைக் கடப்பதே கடினம் என்ற நிலையில், ஜேமி ஓவர்டன் (Jamie Overton) போராடி 43 ரன்கள் எடுத்தார். இறுதியில் சிஎஸ்கே 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வைபவ்சூர்யவன்ஷி– 15 பந்துகளில்அரைசதம்!
128 ரன்கள் என்ற எளிய இலக்கை சுலபமாக விரட்டிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர் வைபவ்சூர்யவன்ஷி, மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு வெறித்தனமாக விளையாடினார். வெறும் 15 பந்துகளில்அரைசதம் கடந்து சாதனை படைத்த அவர், 17 பந்துகளில் 52 ரன்கள் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) குவித்து சிஎஸ்கே பந்துவீச்சை துவம்சம்செய்தார்.
இன்னொரு புறம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (38*) நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, ராஜஸ்தான் அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்து மின்னல்வேகத்தில் வெற்றி பெற்றது. சிஎஸ்கே தரப்பில் ரவீந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டநாயகனாக நந்த்ரே பர்கர் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்தபோட்டிஎப்போது?
முதல் போட்டியிலேயே படுதோல்வியைச் சந்தித்த சிஎஸ்கே அணி, தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு அடுத்த ஆட்டத்திற்குத் தயாராகி வருகிறது. சென்னை அணி தனது அடுத்த லீக் போட்டியில் வரும் ஏப்ரல்3-ம்தேதி(வெள்ளிக்கிழமை) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பஞ்சாப்கிங்ஸ்(PBKS) அணியை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் களமிறங்கும் சிஎஸ்கே மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்புமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

