நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மார்ச் 29ஆம் தேதி தனது கட்சிக்கான வேட்பாளர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தார். குறிப்பாக, 234 தொகுதிகளுக்கும் பாண்டிச்சேரி சட்டசபைக்கு 30 வேட்பாளர்களையும் அறிவித்தார். முன்னதாக, இவர் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளார்.

ஒரே நாளில் இரண்டு தொகுதிகளில் மனு தாக்கல்.. விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு?..
கொளத்தூரில் பிரச்சாரம் செய்த விஜய் அடுத்ததாக ஆதவ் அர்ஜூனா போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் செய்ய சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென பிரச்சார வாகனத்தில் இருந்து காருக்கு சென்று விட்டதாக சொல்லப்பட்டது. மேலும், விஜய் கொளத்தூரில் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் பொழுதே தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், விஜய் பிரச்சார வாகனத்தை சுற்றி மக்கள் சூழ்ந்து கொண்டிருப்பதாகவும், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் போலீசார் உரிய பாதுகாப்பை அளிக்கவில்லை என்று கூறி பாதுகாப்பை அளிக்குமாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழக வெற்றி கழகம் புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.

வாடா பார்ப்போம்.. விஜய்-க்கு ‘நேரடி’ சவால் விடுத்த ஜூலி.. இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!
இதன் காரணமாக கொளத்தூரில் பிரச்சாரம் முடித்துவிட்டு வில்லிவாக்கம் சென்று கொண்டிருந்த விஜய் பாதியிலேயே பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி காரில் ஏறி சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால், வில்லிவாக்கம் தொகுதி பிரச்சாரம் திடீரென சரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

