நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
காரைக்குடியில் பரப்புரை மேற்கொண்ட அவர் கண்டனூர் வழியாக புதுவயல் பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில், கண்டனூர் செக்போஸ்டில் பறக்கும் படையினர் சீமானின் வாகனத்தை சோதனைக்காக நிறுத்தினர்.
அப்போது காலில் இருந்து இறங்கிய சீமான் பறக்கும் படை பெண் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி வரும் காரை நிறுத்தி சோதனை இடுங்கள் என்று கோபமாக பேசிய சீமான் பின்பு காரை சோதனையிட அனுமதித்தார்.
இதில் அப்சட்டான பெண் அதிகாரி தலைமையிலான பறக்கும் படையினர் கடமைக்காக காரை சோதனையிட்டு அனுப்பி வைத்தனர்.

ஒரு கட்சியின் தலைவரான் சீமான் தேர்தல் ஆணையத்தின் சட்ட திட்டங்களை மதிக்காமல் வாக்குவாதம் செய்தது அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

