கோவை மாநகர் கோவைபுதூர் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி காமாட்சி(62). இவர் இன்று காலை S17 எண் கொண்ட தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்தில் முன் பக்கமாக இருக்கைகள் காலியாக இருந்ததால் அங்கு அமருவதற்காக மூதாட்டி பேருந்திற்குள் நடந்து வரும் பொழுது பேருந்து வேகமாக இயக்கப்பட்டதாக தெரிகிறது.
திமுக ஆட்சியை அகற்ற மக்கள் தயார்.. சாமி தரிசனம் செய்த பின் எம்.எஸ்.எம்.ஆனந்தன் ஆருடம்..!
அதில், நிலைதடுமாறிய மூதாட்டி கம்பியை பிடிக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக முன்பக்க கதவு வழியாக பேருந்திற்குள் இருந்து வெளியே விழுந்தார். காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.
தந்தையின் நினைவாக இனிப்புடன் இலவச பயணம்.. இன்று ஒரு நாள் முழுவதும் இலவச பேருந்து பயணம்..!
பின்னர், அவரது உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

