தவெக தலைவர் விஜய் மார்ச் மாதம் 26ஆம் தேதி சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு சென்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது புகார் அளித்திருந்தார். அந்த சர்ச்சைக்குரிய கருத்திற்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வரும் நிலையில், விஜயை பாராட்டி அவரது ரசிகர்களும் நிர்வாகிகளும் “ஒன்று நல்லா புரிஞ்சுக்கோங்க தனக்கு ஒன்னுனா கூட அவர் அமைதியா இருந்திடுவார். ஆனா, தன் தொண்டர்களுக்கும் ரசிகர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் ஏதாவது ஒன்று என்றால் முதல் ஆளா வந்து நிற்கிறது நம்ம தளபதி தான்” என்று பேசி வருகின்றனர்.
ஸ்டைலில் கெத்து காட்டும் ‘ஜோ’.. பிளாக் அவுட்பிட்டில் ஜோதிகா கொடுத்த மாஸ் போஸ்..!

இந்நிலையில், இந்த செயலுக்கு ஒரு புறம் ஆதரவு கிடைத்தால் மறுபுறம் விமர்சனங்களும் கடுமையாக எழுந்து வருகிறது. அதாவது, விஜயின் மனைவி சங்கீதா விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறி உறவில் இருக்கிறார். அதனால், தான் விவாகரத்து வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடிய நிலையில் சங்கீதாவை மிகவும் மோசமாக தரம் தாழ்ந்து தவெகவினர் விமர்சித்திருந்தனர்.
இதனை விஜய் கண்டிக்கவும் மறுப்பு கூறவில்லை என்ற கேள்விகளும் எழுந்தது. பொதுவாக, விஜய் குறித்து தவெக குறித்து அரசியலாக யார் கேள்வி எழுப்பினாலும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் மிகவும் மோசமாகவும், கேவலமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இது வேற லெவல் ரீல்ஸ்.. ‘அவா அவுரா’ பாடலுக்கு பிரியங்கா ஆடிய அசத்தல் டான்ஸ்..! (வீடியோ)
ஆனால், விஜய் இதை கண்டிக்க மாட்டாரா கட்டுப்படுத்த மாட்டாரா இல்லை தனது விருச்சுவல் வாரியார் அணி இப்படித்தான் செயல்படும் என்று கண்டுகொள்ளாமல் கண்டுக்காமலும் இருக்கிறாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது. முன்னதாக, தவெக நிர்வாகிகள் சிலரால் பாலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பணரீதியாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் பலரும் இணையதளத்தில் பத்திரிகையாளர்கள் முன்பு ஆதாரங்களுடன் கூறி இருக்கிறார்களே அவர்களுக்கு விஜய் நியாயம் கேட்டு புகார் அளிக்க மாட்டாரா? ஆதரவாக குரல் கொடுக்க மாட்டாரா என்று கேள்விகளும் எழுந்து வருகிறது.
ஆனால், தனது ரசிகர்களும் தேவைக்காக பின் ஆதரவாளர்களும் தன் மீது இருக்கும் அன்பில் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவரோ அல்லது அவரது கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ கண்டித்து அறிவுரை கூறாதது ஏன் என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படியான பல கேள்விகளை சமூக வலைதளங்களில் முன்வைத்து வருகின்றனர்.

