கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு பகுதியில் உள்ள அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் செந்தில்குமார் வயது 39 இவர் ஆலாங்கொம்பு பகுதியில் கடை வைத்து பழைய துணி வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், காரமடை அருகே சிக்காரம் பாளையத்தில் அன்பு மலர்கள் என்னும் காப்பகம் உள்ளது.
இக் காப்பகத்தில் உள்ள தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று பழைய துணிகளை இலவசமாக வாங்குவது வழக்கம். இவ்வாறு வாங்கி வந்த பழைய துணிகளில் பயன்படுத்துவதற்கு போக மீதியுள்ள துணிகளை செந்தில்குமார் கடையில் போட்டு விடுவது வழக்கம்.
நேற்று பகல் கடையில் பழைய துணிகளை செந்தில்குமார் தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது ஒரு புடவையில் சிறிய மணி பர்ஸ் ஒன்று இருந்ததைக்கண்டார் .மணிபர்சை திறந்து பார்த்ததும் அதற்குள் நான்கு தங்கச் சங்கிலி, ஒரு மோதிரம் மற்றும் இரண்டு ஜோடி கம்மல்கள் என ரூபாய் 12 லட்சம் மதிப்புள்ள 12 சவரன் தங்க நகைகள் மற்றும் ஒரு வங்கியின் ரசீது இருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வகுமார் உடனே சிறுமுகை காவல் நிலையத்திற்கு சென்று அந்தமணி பர்சை வங்கி ரசீதைசிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகாவிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து போலீசார் வீடு வீடாகச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அந்த நகைக்கு உரியவர் சிறுமுகை அறிவு திருக்கோயில் வீதியைச் சேர்ந்த சுந்தர் என்பவரது மனைவி சுதா வயது 40 என்பரது என்பது தெரியவந்தது.
மகனைப் பார்க்க வந்த தந்தைக்கு நேர்ந்த சோகம்..காட்டுயானை உலவுவதால் வனத்துறை எச்சரிக்கை..!
மேலும் போலீசாரின் விசாரணையில் சுதாவின் தாயார் நகையை பத்திரமாக வைத்திருக்க எண்ணி புடவைக்குள் நகையை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. போலீஸாரிடம் சுந்தர் ரசீது மற்றும் ஆவணங்களை காட்டியதை யடுத்து அவர்தான் நகை உரிமையாளர் என்று தெரியவந்தது உடனே போலீசார் அந்த நகைகளை சுந்தரிடம் ஒப்படைத்தனர்.
புடவையில் மண்பர்சில் இருந்த நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பழைய துணி வியாபாரி செந்தில்குமாரை பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் பொது மக்களிடம் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

