கோவையை அடுத்த புகழ்பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 29-ஆம் தேதி தேரோட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காகக் கோவில் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தீவிர ஏற்பாடுகளைச் செய்து வந்தனர். வழக்கமாக தேரோட்டத்திற்கு முன்னதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தேரின் உறுதித்தன்மை மற்றும் சாலைகளை ஆய்வு செய்து தடையின்மை சான்று அளிப்பது வழக்கம்.
ஆடு அறுத்த கூலியைக் கூட பறிமுதல் செய்கிறார்கள்.. தேர்தல் ஆணையத்திற்கு வணிகர்கள் கடும் எச்சரிக்கை..!
அந்த வகையில், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தேரை ஆய்வு செய்தனர். 120 ஆண்டுகள் பழமையான இந்தத் தேரின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு முழுமையான திருப்தி ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
‘நமது வாக்கு நமது உரிமை’- மாரத்தான் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள்..!
இதனையடுத்து, கோவில் அதிகாரிகள் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். தேரில் உள்ள பழுதுகளைச் சரிசெய்து திட்டமிட்டபடி தேரோட்டத்தை நடத்துவதா அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்வதா என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளிக்கப்போகும் இறுதி ஆய்வறிக்கையின் அடிப்படையிலேயே தேரோட்டம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் 29-ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.”

