என்னதான் தமிழ் சினிமா மற்றும் இந்திய சினிமாவிற்கு புதிய நடிகைகள் வந்தாலும் 80, 90களில் வந்த நடிகை மறக்கவே முடியாது. அந்த வகையில், இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் மனிஷா கொய்ராலா. இவர் பாலிவுட் படங்களில் நடிக்க தொடங்கி பின் தெலுங்கு, தமிழ் என பல்வேறு மொழி படங்களிலும் நடித்திருந்தார்.

முன்னதாக தமிழில் மணிரத்தினம் இயக்கிய பாம்பே திரைப்படத்தின் மூலமாக கோலிவுட்டுக்கு அறிமுகமானார். இதை தொடர்ந்து, இந்தியன், முதல்வன், ஆளவந்தான், பாபா, மும்பை எக்ஸ்பிரஸ், மாப்பிள்ளை போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.இப்படி பிசியான நடிகையாக இருந்த மனிஷா கொய்ராலாவுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனுடன் போராடி தற்போது அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்.

வசூலில் மாஸ் காட்டும் ‘யூத்’.. சம்பளத்திலும் கெத்து காட்டும் கென் கருணாஸ் – முழு விபரம் இதோ..!
தற்போது அதற்கான விழிப்புணர்விலும் அவர் ஈடுபட்டு வருகிறாராம். மேலும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அறக்கட்டளையும் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கீதாவும் இப்படி தான்.. ஷூட்டிங்கில் நடிகையிடம் விஜய் சொன்ன சீக்ரெட்..!
இப்படி இருக்கையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட மனிஷா கொய்ராலா ரஜினியுடன் நடித்த பாபா படம் குறித்த சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில், அவர் நான் நடித்த கடைசி பெரிய தமிழ் திரைப்படம் பாபா. அந்த காலத்தில், அப்படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

உசிலம்பட்டி பவுனுத்தாயி வராங்க… ‘தாய் கிழவி’ OTT ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்..!
இதனால், என் திரைப்பயணம் முடிவடைந்து விடும் என நினைத்தேன் அதேபோல்தான் நடந்தது. பாபா திரைப்படம் அது தோல்வி மட்டுமல்ல மிகப்பெரும் டிசாஸ்டர் ஆக அமைந்தது. அதன் பிறகு தென்னிந்திய பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது என தெரிவித்தார்.

