தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக த்ரிஷா பற்றி சில சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சைகள் பேசப்பட்டு வருகின்றன.

முன்னதாக விஜய் விவகாரத்தில், த்ரிஷாவின் பெயர் ரசிகர்கள் மத்தியிலும் முணுமுணுக்கப்பட்டு வந்தது. அதனை மெய்ப்பிக்கும் வகையில், விஜய் திரிஷாவுடன் தயாரிப்பாளர் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்தது. இது மிகப்பெரிய சர்ச்சையாகவே வெடித்தது. இதனால், த்ரிஷா விஜய் குறித்து ரசிகர்கள் உட்பட சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலரும் தற்போது, விமர்சித்து வருகின்றனர்.
வாவ்.. என்ன ஒரு திறமை.. ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்..! (வீடியோ)

இப்படி இருக்க நடிகை த்ரிஷா இந்த சர்ச்சைகள் எதற்கும் பதில் கொடுக்காமல் அவர் பாட்டுக்கு இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போட்டுக் கொண்டு அமைதியாக இருந்து வருகிறார். இவர் இப்படி அமைதியாக இருக்க காரணம் என்ன என்று ரசிகர்கள் அவரது பழைய பேட்டிகளை தோண்டி எடுக்க தொடங்கிவிட்டனர்.
அப்படி பண்ணுவாருன்னு நினைக்கல.. பிரபல நடிகரை வெளுத்து விட்டது ரம்பா..!

அந்த வகையில், த்ரிஷா அளித்த பழைய பேட்டியில், நடிகர்கள் பற்றி பேசுகிறது ஒருத்தவங்கள கிண்டி அவங்களை பத்தி தப்பா பேசறது. இதெல்லாம் பார்த்து அதுக்கு எல்லாம் ஒரு சண்டை போடறதுன்னு நினைக்கும்போது இதெல்லாம் தேவையா? அந்த மாதிரி தான் இருக்கும்.

எதுக்கு இவ்வளவு நெகட்டிவிட்டியா ஏன் பேசுறீங்க? உங்களுக்கு மத்தவங்கள பாத்து ஒரு நல்ல வார்த்தை சொல்ல தோணலையா? அதுக்கு வார்த்தை வரலையா அப்போ எதுவுமே சொல்லாம இருக்கலாமே ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க, இதெல்லாம் நாம கண்டுக்க கூடாது. ரொம்ப காமா இருக்கணும்.

நம்மளை பத்தி தப்பா எல்லாம் பேச்சு வரும்போது, நாம அமைதியா இருக்கணும். அதுதான் நல்ல தீர்வு என்று த்ரிஷாவின் பழைய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில், த்ரிஷா இப்படி கூறியது தற்போது, மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக மாறி உள்ளது. சிலர் அப்போது த்ரிஷா சர்ச்சைக்கு பதில் கொடுக்காமல் இருக்க இதுதான் காரணமா? அவர் எதையும் கண்டுக்க மாட்டாரா? என தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

