திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு கல்லூரியில் முதல் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நடைபெற்று வருகிறது.

10 நாட்கள் நடைபெறும் பேரூர் பட்டீசுவரர் கோவில் பெருவிழா.. களைகட்டும் பங்குனி உத்திரத் திருவிழா..!
அந்த வகையில் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள எல் ஆர் ஜி அரசு மகளிர் கலை கல்லூரியில் இன்று முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு, முதல் முறை வாக்களிக்க உள்ளவர்களுக்கு வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலருமான மனீஸ் நாரணவரே கலந்துகொண்டு தனது கைகளில் மையை பூசிக்கொண்டு “MY FIRST VOTE” என்று அச்சிடப்பட்ட பிளாக்சில் தனது கை ரேகையை பதிவு செய்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்களும் தங்களது கைரேகைகளை பதிவு செய்தனர்.
தொடரும் கஞ்சா வேட்டை: போதைப்பொருள் கும்பலை தட்டித்தூக்கிய பேரூர் போலீசார்..!
இந்த நிகழ்வில் மாணவர்கள் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் ,வாக்களிக்கும் பொழுது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் எடுத்துரைத்தார். இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.

