சூலூர் பகுதியில் நிலவி வரும் நீண்டகால மயானப் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கோரி, சுமார் 4,000 கிறிஸ்தவக் குடும்பங்கள் வரும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும், வீடுகள் தோறும் கருப்புக் கொடி ஏற்றிப் போராடப் போவதாகவும் அறிவித்துள்ளன.
கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் அருகே உள்ள தேவாலயத்தில், சூலூர் கிறிஸ்தவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் பெந்தகோஸ்தே மாமன்றம் உள்ளிட்ட பல்வேறு திருச்சபைகளின் கூட்டமைப்பினர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சூலூர் பகுதியில் கடந்த 1974-ஆம் ஆண்டு கக்கன் நகரில் ஒதுக்கப்பட்ட மயான நிலத்தைப் பயன்படுத்த முடியாத நிலை நீடிப்பதாலும், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யத் திருப்பூர், பல்லடம், மதுக்கரை எனப் பிற இடங்களுக்கு எடுத்துச் செல்லும் அவலம் தொடர்வதாலும், கிறிஸ்தவர்களுக்காக கொடுக்கப்பட்ட மயானத்தில் புதைக்க இடம் கிடைக்காமலும், அதை முறைப்படுத்த முடியாமலும் இங்குள்ள கிறிஸ்தவர்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
பலமுறை இது தொடர்பாக புகார்கள் அளிக்கப்படும் பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை எடுக்காமல் வருகிறது முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுத்தும் நேரில் சந்தித்து மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. இந்நிலையில் தேர்தலை புறக்கணிப்பதாக சூழலில் இந்தக் கூட்டத்தில் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பெந்தகோஸ் மாமன்ற தலைவர் செல்வராஜ், “கடந்த 14 வருடங்களாக இந்த மயானப் பிரச்சினை தொடர்பாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால் இதுவரை அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அரசுக்குத் தகுந்த அழுத்தம் கொடுப்பதற்காகவே இந்தத் தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை எடுத்துள்ளோம்.
இதன் ஒரு பகுதியாக, சூலூர் பகுதியில் உள்ள 4,000 கிறிஸ்தவக் குடும்பங்களின் வீடுகளிலும் கருப்புக் கொடிகள் மற்றும் போராட்டத்தை விளக்கும் பேனர்கள் வைக்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.கிறிஸ்தவர் சமூக நல அறக்கட்டளையின் பொதுச் செயலாளர், தொடர்ந்து பேசிய டான் பாஸ்கோ, இது தொடர்பாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்குப் பலமுறை மனு அளித்துள்ளோம்.
ஆனால் இதுவரை கிறிஸ்துவ அமைப்பினரை அழைத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தொடர்ந்து போராடியும் தீர்வு எட்டப்படாத நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளோம். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விரைவில் மனு அளிக்க உள்ளோம்” என்றார்.

