தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசை நோக்கி ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வைக்கும் உரிமையை அரசியல் சாசனம் நம் அனைவருக்கும் கொடுத்துள்ளது.
கருத்து சுதந்திரம் நம் உரிமை மட்டுமல்ல. ஆளும் தரப்பின் தவறுகளை சுட்டிக்காட்டும் ஜனநாயகக் கடமையும் கூட. அப்படி மாற்றுக்கருத்துகளை முன்வைப்பவர்களை தொடர்ந்து மூர்க்கத்தனமாக அடக்கி ஒடுக்கும் வேலையை தொடர்ந்து இந்த ஆளும் திமுக செய்து வருகிறது.
இன்று சிவகங்கையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த செய்தி விவாதத்தின்போது அந்த தொலைக்காட்சியின் நெறியாளர் ராஜேஷ் சகிப்புத்தன்மை துளியும் இல்லாத திமுகவினரால் மிக மோசமாக தாக்கப்பட்டிருக்கிறார்.
தோல்வி பயத்தில் எதிர்கருத்து வைப்பவர்கள் மேல் எல்லாம் வன்முறையை நிகழ்த்தும் ஆளுங்கட்சியின் இந்த போக்கு கடுமையான கண்டனத்திற்குரியது. திமுகவினரின் இத்தகைய ஆணவத்திற்கு தமிழக மக்கள் தேர்தல் நாளன்று தக்க பதிலடி கொடுப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

