தவெக தலைவர் விஜய் என்டிஏ கூட்டணிக்கு சென்று விடுவார் என்று பலரும் ஆருடம் கூறிய சூழலில், அதெல்லாம் இல்லை மதசார்பற்ற கொள்கையில் எப்போதுமே சமரசம் கிடையாது என்றும், நாங்கள் அந்த டீமும் இல்லை. இந்த டீமும் இல்லை எப்போதுமே மக்கள் டீம் தான் என்று உறுதி கொடுத்திருக்கின்றனர்.
இதன் காரணமாக தவெக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கும் சூழலில், நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் பேசி இருக்கும் விஷம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முன்னதாக, விஜய் மும்பைக்கு சென்றதை வைத்து பலரும் விமர்சிக்க தொடங்கி விட்டார்கள். ஒரு சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா மும்பையில் இருந்து போட்ட புகைப்படங்களையும், விஜய் மும்பை சென்றதையும், இணைத்து வைத்து இஷ்டத்துக்கு சமூக வலைதளங்களில் கதைகளை அள்ளி விட்டனர்.
இந்நிலையில், சிவக்குமார் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. இந்த உலகத்தில் எல்லாம் பெற்றவர் என்பவர் யாருமே கிடையாது. நடிகர் நாடெல்லாம் என உலகத்திற்கு நிரூபித்தவர் எம்ஜிஆர் அப்படி ஒரு நடிகர் இனிமேல் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. இந்த நாட்டை ஆட்சி செய்தவர் எம்ஜிஆர் ஆனால், அவருக்கு வாரிசு இல்லை.

உலகத்திலேயே பெரிய நடிகர் சிவாஜி கணேசன் அவரை மாதிரியும் இன்னொருவர் பிறப்பதற்கு வாய்ப்பு இல்லை. அவரே அரசியலுக்கு வந்து தோற்றுப் போய்விட்டார். நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். கடவுள் என்ன கொடுக்கிறாரோ அதை வைத்து சந்தோஷப்படுங்கள். இன்னொருவருடன் ஒப்பீடு செய்யாதீர்கள் என்று அதில் தெரிவித்தார்.

இதை பார்த்த ரசிகர்களில், ஒரு தரப்பினரோ சிவக்குமார் இதில், விஜயின் பெயரை சொல்லவில்லை. அவ்வளவுதான் மற்றபடி எம்ஜிஆரை தொடர்ந்து இன்னொரு நடிகரால் நாட்டை ஆட்சி செய்யவே முடியாது என சொல்லி விஜயால் முதலமைச்சராகவே முடியாது என்பதை மறைமுகமாக கூறியுள்ளார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

