பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது சூர்யாவுக்கும், ஜோதிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, பேரழகன் உள்ளிட்ட படங்களில் இருவரும் ஒன்றாக நடித்தனர். இவர்களின் காதலுக்கு முன்னதாக சிவகுமார் ஒத்துக் கொள்ளவில்லை என்று கூறப்பட்டது.
பின்னர் இருவரும் திருமணம் செய்து வைக்காவிட்டால் கடைசி வரை தனியாகவே வாழ்ந்து விடுவோம் என கண்டிஷனாக கூடியதால் சிவக்குமார் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டதாக கூறப்பட்டது. திருமணம் கடந்த 2006 ஆம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும் மகனும் இருக்கிறார்கள். முன்னதாக, திருமணத்திற்கு பின்னர் மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கும் ஜோதிகா தற்போது மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார்.

சிவக்குமாரோடு ஜோதிகாவுக்கு சண்டை ஏற்பட்டதால் தான் கணவர் மற்றும் குழந்தைகளை கூட்டிக்கொண்டு மும்பை சென்று விட்டார் என்று வதந்திகள் கிளம்பின அதை திட்டவட்டமாக இரண்டு பேருமே மறுத்துவிட்டார்கள்.
இந்நிலையில், திருமணத்திற்கு முன்பு நடிப்பதற்கு சிவக்குமார் முழு ஆதரவு கொடுத்து இருக்கிறார் என்று ஒரு பேட்டியில் ஜோதிகா விளக்கம் அளித்திருந்தார். தற்போது சிவகுமாரின் கருத்து ஒன்று சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஹோட்டல் சாப்பாடு நடிகை மாதிரி வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி, வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால், ஓட்டலில் சாப்பிடலாமே தவிர்த்து மூன்று வேலையும் சாப்பிட்டால் பைத்தியம் பிடித்து விடும்.

எப்போதுமே வீடு மனைவி குழந்தைகள் தான் முதலில் ஹோட்டல் எல்லாம் அப்புறம் தான் என்றார். அவரது, இந்த கருத்திற்கு ப்ளூ சட்டை மாறன் தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் ஹோட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்களது பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை திருமணம் செய்த உங்கள் புதல்வர் இந்த கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா? என்று சிவகுமாரை விளாசியுள்ளார்.

