தமிழ் சினிமாவின் 80கள், 90களில் தனது தனித்துவமான நடிப்பு, அபிநயம் மற்றும் காந்தக் கண்களால் ரசிகர்களின் மனதில் ஆழமான இடம் பிடித்தவர் நடிகை பானுப்பிரியா. ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக பிஸியாக இருந்த அவர், தற்போது திரையுலகில் அதிகம் காணப்படாத நிலையில் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவே உள்ளது.
இந்நிலையில், நடிகை பானுபிரியாவைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான நினைவுகளை நடிகர் பப்லு பிரிதிவ்ராஜ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அந்த பேட்டியில், “நான் முதன்முதலில் மனதில் ‘சைட் அடித்த’ நடிகை என்றால் அது பானுபிரியாதான்” என்று அவர் திறந்த மனதுடன் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், K. Balachander இயக்கத்தில் உருவான Vaaname Ellai திரைப்படத்தில் இருவரும் சேர்ந்து நடித்துக் கொண்டிருந்த காலத்தை நினைவுகூர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்ற “நாடோடி மன்னர்களே” என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது நடந்த ஒரு சம்பவத்தை அவர் விவரித்தார்.

அந்த பாடலில், உடலின் ஒவ்வொரு அங்கமும் தனித்தனியாக அசையும் விதத்தில், தஞ்சாவூர் பொம்மையைப் போல பானுபிரியா ஆடிய நடனம் அனைவரையும் கவர்ந்ததாக கூறினார். “தலை, கை, இடுப்பு, கால் என்று ஒவ்வொரு அசைவும் தனித்தனி துல்லியத்துடன் இருந்தது. அதை பார்த்த நான் மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தேன்” என்று பப்லு தெரிவித்துள்ளார்.

அந்த நேரத்தில் தன்னுடைய பின்னால் யாரோ கை வைத்ததை உணர்ந்ததாகவும், “யாரு மச்சான்… எல்லாம் தனித்தனியா ஆடுது!” என்று சொல்லிக் கொண்டு திரும்பிப் பார்த்தபோது, பின்னால் இயக்குநர் கே.பாலச்சந்தர் நின்றுகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறினார்.
அதன் பின் நடந்த சம்பவம் இன்னும் நினைவில் பதிந்துள்ளது என கூறிய பப்லு, “அவர் திடீரென்று கன்னத்தில் ஒரு அறைவிட்டு, ‘முண்டம்… என்னடா பண்ணிட்டு இருக்கே? போய் உன் வேலையை பார்’ என்று கடிந்து கொண்டார். அந்த சம்பவத்தை நான் இன்னும் மறக்க முடியாது” என சிரிப்புடன் பகிர்ந்துள்ளார்.

இந்த நினைவுகள், ஒரு காலத்தில் செட்டில் நடந்த சுவாரஸ்ய தருணங்களையும், இயக்குநர் K. Balachander அவர்களின் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.

