ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது.
இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வரக்கூடிய நடிகை ராஷ்மிகா மந்தனா இவர் நடிப்பில் அடுத்ததாக Cocktail 2, மைசா, அல்லு அர்ஜுன் 22, அனிமல் பார்க் மற்றும் புஷ்பா 3 ஆகிய திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன. இந்நிலையில், திருமணத்திற்கு பின் நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு சிறந்த நடிகை என்கிற விருது கிடைத்துள்ளது.

இதில் தி கேர்ள் ஃபிரெண்ட் திரைப்படத்திற்காக நடிகை ராஷ்மிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்து இருக்கிறது. ஒரு காலத்தில் என்னுடைய நடிப்பை கிண்டல் செய்தார்கள். இப்போது, என் நடிப்புக்காக விருது கிடைத்துள்ளது. மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போல் நான் உணர்கிறேன். இந்த திரைப்படத்திற்காக விருது கிடைத்துள்ளது என்பது மிக சிறப்பானது. ஏனென்றால், அது போன்ற நிறைய படங்கள் வருவதை ஊக்குவிக்கும் இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி என அதில் தெரிவித்திருந்தார்.


