கரூர் வேலுச்சாமி புறத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை அடுத்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இலங்கை, நேபாளம் போல் அரசின் அடக்குமுறைக்கு எதிராக Gen z புரட்சி ஏற்படும் என பதிவிட்டிருந்தார்.

அதனால், ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் அரசு மீதான அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையிலும், இளைஞர்கள் போராட்டங்களில் இறங்க கூடும் என எச்சரிக்கும் வகையில் மட்டுமே இந்த கருத்து அமைந்துள்ளதாகவும், வன்முறையோ வெறுப்பையோ தூண்டும் வகையில் இல்லை எனக் கூறி கடந்த ஆண்டு நவம்பரில் இந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

ஆனால், இந்த உத்தரவை திரும்ப பெறக்கோரி புகார்தாரரான எல்ஐசி ஏஜென்ட் சண்முகம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து முடிவெடுக்க நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு மீண்டும் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இந்த மனுவை விசாரித்த நீதிபதி குறித்த மனுவானது விசாரணைக்கு உகந்ததே எனக் கூறி மனுவை முன்னிட்டு பட்டியலிட பதிவுத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, இந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் குறித்து ஆதார் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார்.

அதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் கடுமையான விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்த நிலையில், இதற்கு நடிகர் ரஜினிகாந்த் காலம் பேசாது காத்திருந்து பதில் சொல்லும் என பதில் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, நேற்றைய தினம் ரஜினி குறித்து பேசியமைக்கு ஆதவ் அர்ச்சனா மன்னிப்பு கேட்டிருந்தார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான பழைய வழக்கை மீண்டும் உயர்நீதிமன்றம் விசாரணை எடுத்து இருப்பது அவருக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது.

