வீட்டில தோசை மாவு இல்லையா? கவலையை விடுங்க சுடச்சுட சூடான தோசை சுவையான தக்காளி சட்னியும் செய்யலாம். இந்த தோசை சற்று வித்தியாசமாக தான் இருக்கும். ஆனா இதுல சத்துக்களும் நிறைந்து இருக்கு.
தேவையான பொருட்கள்
சட்னிக்கு,
- ஒரு தக்காளி
- சிறிய துண்டு புளி
- 10 வர மிளகாய்
- 3 காஷ்மீரி மிளகாய்
- சுவைக்கேற்ப உப்பு
சட்னி தாளிப்பதற்கு,
- நாலு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- அரை டீஸ்பூன் கடுகு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- ஒரு கொத்து கருவேப்பிலை
தோசை மாவுக்கு,
- ஒரு கப் கோதுமை மாவு
- உப்பு
- தேவையான அளவு தண்ணீர்
வதக்குவதற்கு,
- ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்
- முக்கால் டீஸ்பூன் கடுகு
- ஒரு டீஸ்பூன் உளுத்தம்பருப்பு
- இரண்டு டீஸ்பூன் கடலைப்பருப்பு
- ஒரு பச்சை மிளகாய்
- சிறிய துண்டு இஞ்சி
- ஒரு கொத்து கருவேப்பிலை
- கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம்
- துருவிய ஒரு கேரட்
- ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி

செய்முறை
Step 1: முதலில் மிக்ஸர் ஜாரில் நறுக்கிய தக்காளி, வரமிளகாய், காஷ்மீரி வர மிளகாய், சிறிய துண்டு புளி, மற்றும் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து சற்று நீர் சேர்க்காமல் நைசாக அரைத்துக் கொள்ளவும். அதன் பின்னர், அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Step 2: பின்பு சட்னியை தாளிப்பதற்கு ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்தால் தக்காளி சட்னி தயார்.
Step 3: பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து அத்துடன் சுவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி கட்டிகள் இன்றி நன்றாக கலந்து ஒரு பத்து நிமிடம் மாவை ஊற வைக்க வேண்டும். அதற்குள் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும்.
Step 4: பின்னர் அதில், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயத்தூள் மற்றும் நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இதில், துருவிய கேரட் மற்றும் ஒரு கைப்பிடி கொத்துமல்லி சேர்த்து ஒரு நிமிடத்தில் வதக்கி இறக்க வேண்டும்.
Step 5: பிறகு வதக்கிய பொருட்களை ஊற வைத்துள்ள கோதுமை மாவுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இறுதியாக தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் கலந்து வைத்துள்ள மாவை தோசையாக ஊற்றி மேலே எண்ணெய் சேர்த்து முண்ணும் பின்னுமாக வேக வைத்து எடுத்தால் சுவையான கோதுமை தோசை ரெடி.

