உத்தரகோசமங்கை ஆன்மீக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தலமாகும். ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த கோவில், பக்தர்களால் “ரகசிய தலம்” எனவும் அழைக்கப்படுகிறது. உத்திர கோசமங்கை ஆலயம் உலகிலேயே சிவபெருமானுக்கு என்று முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஆலயம் ஆகும். இங்கு நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவான கோவிலும் இதுதான் என்று கூறப்படுகிறது.

கோவிலின் வரலாறு
“உத்தர + கோச + மங்கை” என்ற சொல்லில் இருந்து “உத்தரகோசமங்கை” என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இதன் பொருள் – சிவபெருமான் பார்வதி தேவிக்கு ரகசியமான வேத ஞானத்தை (உபதேசம்) வழங்கிய இடம். இந்த தலத்தில் சிவன், பார்வதிக்கு பிரபஞ்ச ரகசியங்களை கூறியதாக புராணங்களில் குறிப்பிடப்படுகிறது. அதனால் இது “ரகசிய தலம்” என பக்தர்கள் நம்புகின்றனர்.

முன்னதாக நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட கோவில் உத்திர கோசமங்கை ஆலயம் என்று சொல்லப்படுகிறது. ஆயிரம், சிவனடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்ற ஆலயமும் இது தான் என்று கூறப்படுகிறது. மூன்றாயிரம் ஆண்டுகளாக பூத்துக் குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயமும் இதுதான். இவ்வளவு சிறப்பு வாய்ந்த உத்தர கோசமங்கை ஆலயத்தை பற்றி இந்த பதிவில் காண்போம்.

தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவாவதற்கு காரணமான ஆலயம் உத்தரகோசமங்கை ஆலயம். உலகிலேயே முதல் மரகத நடராஜர் சிலை நிறுவப்பட்ட ஆலயமும் பல அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாக இருக்கும் ஆலயம்.

மரகத நடராஜர் – கோவிலின் மிகப்பெரிய சிறப்பு
இந்த கோவிலின் மிகப்பெரிய சிறப்பு மரகத நடராஜர் (Maragatha Natarajar) சிலை ஆகும்.
- முழுவதும் மரகதக் கல்லால் உருவாக்கப்பட்ட அரிய சிலை
- உலகிலேயே மிகவும் அரிதான நடராஜர் வடிவம்
- வருடத்தில் ஒரே நாளில் மட்டுமே முழுமையாக தரிசிக்க அனுமதி
பொதுவாக இந்த சிலை சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும்.

ஸ்ரீ ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்திரகோசமங்கை மங்களநாதர் மங்களநாயகி திருக்கோவில் ஆகும். இங்கு உத்தர கோஷமங்கையில் உள்ள மூலவர் சிலை சுயம்புலிங்கம் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முன்பு தோன்றியதாக கணக்கிடப்படுகிறது. இக்கோவில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது.

இந்த கோவில் இருக்கக்கூடிய இடத்தையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது. இக்கோவிலில், சன்னதி முன்பு தம்பதியர் இணைந்து வழிபட்டால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்களும் சண்டை சச்சரவுகளும் விரைவில் தீர்வு காணப்படும் என்று நம்பப்படுகிறது.
அருத்ரா தரிசனம் – ஆண்டின் முக்கிய திருவிழா
அருத்ரா தரிசனம் (Arudra Darisanam) இந்த கோவிலின் மிக முக்கியமான திருவிழா.
- மார்கழி மாதத்தில் நடைபெறும்
- அந்த நாளில் மட்டுமே மரகத நடராஜர் முழு தரிசனம்
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும்
இந்த நாளில் சிவனின் ஆனந்த தாண்டவம் காண்பது மிகப் பெரிய புண்ணியம் என நம்பப்படுகிறது.

முன்னதாக, திருவிளையாடல் புராணத்தில் வரும் வழியில் மீன்பிடித்த படலம் என்னும் வரியில் இத்தளத்தை தான் குறிப்பிடுகின்றனர். சிறிது காலம் பாண்டிய மன்னனின் காலத்தில் அவர்களது தலைநகரமாக விளங்கிய சிறப்பு பெற்றது.
ஆரம்ப காலகட்டத்தில், வியாக்கிரபுரம் , மங்களபுரி ஆதிசிதம்பரம் சிவபுரம், மங்கலம், பிரம்மபுரம், இலந்திகைப்பள்ளி, பத்திரிகா ஷேத்திரம், தெட்சிண கயிலாயம், சதுர்வேதி, என்றெல்லாம் அழைக்கப்பட்டதாக வரலாற்று புத்தகங்களில் குறிப்பேடுகள் இருக்கின்றன.

கோவிலின் கட்டிட அமைப்பு
- திராவிடக் கலையமைப்பில் கட்டப்பட்டது
- பழமையான கோபுரம் மற்றும் சிற்பங்கள்
- அமைதியான ஆன்மீக சூழல்
- சோழர் காலத்தைச் சேர்ந்த வரலாற்று சான்றுகள்
இந்த கோவிலில் மங்கள நாதர் மங்களநாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால், அதற்கான முழுமையான பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள மூலவருக்கு காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவர், மங்களநாதர், மங்களேஸ்வரர் என்னும் பெயர்களும் குறிப்பிடப்படுகின்றன. இறைவிக்கு மங்களேஸ்வரி, மங்கலாம்பிகை, சுந்தர நாயகி போன்ற பல பெயர்களும் பல பெயர்களால் அழைக்கப்படுகின்றார்.

இத்தலத்தில் உள்ள கல்வெட்டுகளில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயரும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மண்டோதரி பிறந்த இடம் இந்த உத்தரகோசமங்கை தான் என்றும் கூறப்படுகிறது. இந்த குறிப்பின் மூலம், இத்தலம் ராமாயணத்திற்கு முன்பே உருவாக்கப்பட்ட ஆலயம் என்று வரலாற்று ஆசிரியர்களால் கூறப்படுகிறது.
செல்ல சிறந்த நேரம்
- மார்கழி மாதம் (அருத்ரா தரிசனம்)
- பிரதோஷம், சிவராத்திரி நாட்கள்
- அதிகாலை நேர தரிசனம் மிகவும் சிறப்பு

இத்தலத்தில், சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். இக்கோவிலில் ஆதி காலத்து வராகிக்கு தனி சன்னதியும் அமைக்கப்பட்டுள்ளது. பிரதோஷ நாட்களில் இங்கு தாழம்பூ வைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இதற்கான காரணம், இக்கோவிலில், சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் தாழம்பூ மாலை கட்டி வழிபட்டால் அனைத்து விதமான தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. இத்தளத்தில், உள்ள கோயில் குளத்தில் உள்ள மீன்கள் கடல்வாழ் மீன்களாகும். சிவபெருமானால் பரதநாட்டிய கலையை முதன்முதலாக உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட இடம் உத்திரகோசமங்கை கோவில் ஆகும்.
பக்தர்கள் நம்பிக்கை
இந்த கோவிலுக்கு வருபவர்கள்:
- திருமண தடை நீங்க
- குழந்தை பாக்கியம் கிடைக்க
- மன அமைதி பெற
- தொழில் முன்னேற்றம் அடைய
என பல நன்மைகளை பெறுவதாக நம்பப்படுகிறது.

உத்தரகோசமங்கை என்பது ஒரு சாதாரண கோவில் அல்ல.
இது சிவன் பார்வதிக்கு ரகசியம் கூறிய தலம், மரகத நடராஜர் தரிசனம் கிடைக்கும் அரிய இடம், மற்றும் ஆன்மீக சக்தி நிரம்பிய புனித தலம். ஒருமுறை இந்த கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தால், மன அமைதி மற்றும் ஆன்மீக நிறைவு கண்டிப்பாக கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். ஆதிகாலத்து சிவாலயம் ’ மற்றும் உலகின் முதல் சிவாலயம் இதுவென கூறுகின்றனர். இங்கு தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் செய்யப்பட்டது.
கோவிலுக்கு செல்லும் வழி

