சின்னத்திரையில் பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சன் டிவியில் நிறைய ஹிட் தொடர்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டு சீசன்கள் எல்லாம் ஒளிபரப்பாக்கி பல தொடர்கள் சன் டிவி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
அதில், ஒன்றுதான் சுந்தரி. இந்த தொடரில், சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் பேவரட்டாக இருந்தவர் சுந்தரி சீரியல் புகழ் கேப்ரியல்லா செல்லஸ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஸ்டாண்ட் அப் காமெடியில் அசத்தியிருந்தார்.

மேலும், இவர் டிக்டாக்கில் இருந்து கருத்து சொல்லும் விதமாக சில வீடியோக்களை முன்னதாக வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் பிரபலமான இவர் சின்னத்திரையில் கலக்கி வெள்ளி திரையில் நயன்தாராவோட ஐரா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி, காஞ்சனா 3 போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

எந்த விஷயமாக இருந்தாலும் தைரியமாக பேசக்கூடிய கேப்ரியல்லா செல்லஸ் வாழ்க்கையில் தான் செய்த தவறு குறித்து தற்போது பேசியுள்ளார். அதில், எங்க அப்பா டான்ஸ்க்கு நோ சொல்லிட்டாரு அதனால் லெட்டர் எழுதி வைத்துவிட்டு சென்னைக்கு வந்துட்டேன். சமாதானம் செய்து என்னை திரும்ப ஊருக்கு அழைத்து சென்றார்கள்.

அப்போது, ஊரில் இருந்தவர்கள் இவள் எவன் கூடயோ ஓடிப்போயிட்டா கல்யாணமே பண்ணிட்டு இருப்பா அப்படி இப்படி அசிங்கமாக பேசினார்கள். நான் என் வாழ்க்கையில் செய்த பெரிய தப்பு அது. இப்போது நினைத்தாலும் அது எனக்கு அசிங்கமாகத் தான் இருக்கிறது என்று வெளிப்படையாக அவர் பேசியுள்ளார்.

