பொள்ளாச்சியில் இருந்து நேபாளத்திற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற போது ஏற்பட்ட விபத்தில் கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் உடல்கள் தற்போது பொள்ளாச்சிக்கு கொண்டுவரப்பட்டது.
தமிழகத்தில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணமாக நேபாளம் சென்று தரிசனம் முடித்துவிட்டு வரும் வழியில் சுற்றுலா வேன் வனப்பகுதியில் சுமார் 400 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
இதில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி உட்பட மூன்று பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்களை சொந்த ஊருக்கு விமான மூலம் கொண்டுவரப்பட்டனர்.
தற்போது அவர்களது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட நிலையில் உடல்களை உடுமலை சாலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

