பொதுவாக குழந்தைகள் இருக்கக்கூடிய வீடுகளில் சளி, இருமல், காய்ச்சல் மருந்துகளை எப்பொழுதுமே ஸ்டாக் வைத்திருப்போம். அப்படி வாங்கி பயன்படுத்திய மருந்து பாட்டினை எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம் என்ற கேள்வி மனதிலும் எழக்கூடிய ஒன்று.
சில மருந்து பாட்டில்களை திறந்தவுடன் ஒரு வாரம் தான் பயன்படுத்த வேண்டும் என்றும், இன்னும் சிலர் 15 நாட்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் காய்ச்சல் மற்றும் சளி மருந்து பாட்டில் திறந்தால் எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்பதை பற்றி இங்கே காண்போம்.

பொதுவாக மருந்துகளுக்கு என்று காலாவதி தேதி உள்ளது. இந்த குறிப்பிட்ட தேதியை தாண்டி அந்த மருந்துகளை பயன்படுத்தக் கூடாது. அதாவது, மருந்து பாட்டினை திறந்த பின்னர், எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம் என்று பார்க்கும்போது இணையத்தில் ஆளுக்கு ஒரு கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதனால், குறுகிய நாட்களிலேயே மருந்துகளை தூக்கி எறிந்து விட நேரிடுகிறது. ஆனால், அப்படி தூக்கி எறிய வேண்டிய அவசியம் இல்லை என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். மருந்துகளை எத்தனை நாட்கள் வரை பயன்படுத்தலாம். பொதுவாக மருந்துகளில் இப்படியான பிரச்சினை எதுவும் இல்லை மாத்திரைகள் அதன் காலாவதி தேதி வரை நிலையானதாகவே இருக்கும்.

சில சமயங்களில் மாத்திரைகளை சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கும் பொழுது அதன் நிலைத்தன்மையில் மாற்றம் ஏற்படக்கூடும். ஆனால், சிரப் வகையான மருந்துகளில் தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இப்படியான சிறப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆய்வுகளின், படி பாராசிட்டங்களை திறந்த பின்னர், ஐந்திலிருந்து ஆறு மாதங்கள் வரை வைத்து பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும், பாதுகாப்பு கருதி ஒரு மூன்று மாதங்கள் வரை மட்டுமே வைத்து பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சளி, இருமல், சிரப்
இந்த வகையான சிறப்புகளில் இனிப்புக்காக சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த சிரப்களில் இது குறித்து எந்த ஒரு ஆய்வுகளும் மேற்கொண்டதை கண்டுபிடிக்கவும் முடியவில்லை.
ஆனால், சில நிபுணர்கள் ஒன்றிலிருந்து மூன்று மாதம் வரை மட்டுமே இந்த மருந்துகளை பயன்படுத்த பரிந்துரைக்கின்றன. எனவே, இப்படியான மருந்தை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்துவது தவிர்ப்பது நல்லது.

பவுடர் வடிவ ஆண்டிபயாட்டிக் மருந்துகள்
இந்த வகையான மருந்துகளில் பவுடரை நீரில் கலந்து ஏழிலிருந்து பத்து நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், அந்த மருந்து பாட்டிலிலும் இது தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவே, நீரை கலக்காவிட்டால், அதன் காலாவதி தேதி வரை வைத்து பயன்படுத்தலாம்.
சொட்டு மருந்துகள்

கண், காது, மூக்கு போன்றவற்றிற்கு பயன்படுத்தப்படும் சொட்டு மருந்துகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பிற மருந்துகள் ஊசிகள்
- இன்சுலின் போன்ற ஊசிகளை திறந்து விட்டால் அதை ஒரு மாதம் வரை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது
- கிரீம் மற்றும் ஜெல் போன்றவற்றை திறந்த பின்னர் மூன்று மாதம் வரை மட்டுமே வைத்து பயன்படுத்துவது சிறந்ததாக கருதப்படுகிறது.
- இன்ஹேலர் அதன் காலாவதி தேதி வரை மட்டுமே பயன்படுத்துவது சிறந்ததாக கூறப்படுகிறது.
- சத்து மருந்துகள் வைட்டமின் சத்து, இரும்பு சத்து போன்ற மருந்துகளை ஒன்றிலிருந்து, மூன்று மாதங்களுக்கு வரை மட்டுமே வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை, இரும்பல் காய்ச்சல் மருந்து பாட்டில் ஏதாவது வித்தியாசமான வாசனை வந்தாலோ, நிறம் மாறினாலோ தெரியாமல் அதில் விரல் பட்டுவிட்டால், கிருமிகள் புகுந்து விட்டாலோ, எறும்பு மொய்க்க தொடங்கி விட்டாலோ, திரிதிரியாக இருந்தாலும் அல்லது உங்களுக்கு அந்த மருந்தை பயன்படுத்த மனம் ஒப்புக் கொள்ளாவிட்டாலோ, யோசிக்காமல் அந்த மருந்துகளை தூக்கி வீசுவது சிறந்தது என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.
எனவே இதுவரை உங்களுக்கு மருந்து பாட்டிலை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்தலாம் என்பது தெரியாமல் இருந்தால் இனி டாக்டர் அருண்குமார் கூறியவாறு பயன்படுத்துங்கள்.
இதுக்குறித்து உணவு ஆலோசகரும், குழந்தை நல மருத்துவருமான டாக்டர் அருண்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விரிவாக விளக்கியுள்ளார்.
அந்த வீடியோ இதோ,
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

