இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தின் போது ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட மே 17 இயக்கத்தை சேர்ந்த சிவா திலீபன் உயிரிழந்தார்.
இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், இந்தித் திணிப்பு எதிர்ப்பில் இன்னொரு உயிரை இழந்துள்ளோம் எனும்போது பெரும் வேதனை உண்டாகிறது.
மொழித் திணிப்பை எதிர்த்து இரயில் முன் பாய்ந்த மே 17 இயக்கத்தின் அன்புச் சகோதரர் திரு.சிவா திலீபன் அவர்கள் சிகிச்சை பலனின்றி தன் இன்னுயிரை இழந்துள்ளார். அவரை இழந்துவாடும் மே 17 இயக்கத் தோழர்களுக்கும், குடும்பத்தினருக்கும், மொழி உணர்வாளர்களுக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரின் நினைவும் நம் மொழியும் என்றும் வாழும்.

கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளின்படி “இனி ஒரு உயிரும் போக வேண்டாம்”. உழைப்பின் மூலம் மொழி காப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

