கோவையில் அருகே உள்ள முருகன் கோவில் மலை பாறை இடுக்குகளில் மாணவியுடன் மாணவர் – அதிர்ச்சியை ஏற்படுத்தும் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மலை மேல் அமைந்து உள்ள முருகன் கோவிலில், பள்ளிச் சீருடையுடன் மாணவர் மற்றும் மாணவி பாறை இடுக்குகளுக்குள் மறைவாகச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை நேரில் பார்த்த பொதுமக்கள், அந்தச் செயலைத் தங்கள் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர்.கிணத்துக்கடவு மலைக் கோவிலுக்கு பள்ளிச் சீருடை அணிந்த மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் யாருடைய கண்ணிலும் படாமல் மலைப் பகுதியின் மறைவான பாறை இடுக்குகளுக்குள் செல்வதைக் கண்டு அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களைப் பார்த்த பொதுமக்கள், அவர்கள் பாறை இடுக்குகளுக்குள் இருந்து வெளியே வருவதை வீடியோ எடுத்தனர்.அந்த வீடியோவில், “பள்ளிப் படிக்கும் வயதில் இப்படிப்பட்ட செயல்களில் ஈடுபடுவது முறையா ? சீருடை அணிந்து கொண்டு பாறை இடுக்குகளுக்குள் சென்று என்ன வேலை செய்கிறீர்கள் ?” எனப் பொதுமக்கள் ஆவேசமாகக் கேள்வி எழுப்பும் ஆடியோவும் இடம் பெற்று உள்ளது.
பள்ளிப் பருவத்தில் ஏற்படும் ஈர்ப்பு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், இது போன்ற தவறான பாதையில் மாணவர்கள் செல்வது அவர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்கிறார்களா ? அல்லது வேறு எங்காவது செல்கிறார்களா ? என்பதைப் பெற்றோர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் பள்ளி நேரத்தில் வெளியே செல்வதைத் தவிர்க்கக் கடுமையான விதிகள் பின்பற்றப்பட வேண்டும்.
பொது இடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் இது போன்ற அநாகரிகச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கக் கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் காவலாளிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த வீடியோ தற்போது கோவை மாவட்டப் பகுதிகளில் வேகமாகப் பரவி வருவதால், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இது குறித்து முறையான விசாரணை நடத்தி, மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகளை (Counseling) வழங்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

